Category: Your Kattankudy
-
அண்ட்ரொய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்
லண்டன்: பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமத்தனமான அண்ட்ரொய்ட் திறன் பேசி செயலி ஒன்று வலம் வருவதை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.’அடல்ட் பிளேயர்’ என்ற இந்த செயலி பயனாளிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டும், ஆனால் உண்மையில் அது ஃபோனில் முன்பக்கத்து கமராவை ரகசியமாக இயக்கி பயனாளியை படம் பிடித்துவிடும்.
-
பொது பல சேனா (BBS) க்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தது தவ்ஹீத் ஜமாத் – SLTJ
கொழும்பு: ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று (06.09.2015) ஹெம்மாதகம நகரில் நடைபெற்ற இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பில் நேற்றைய தினம் ஹெம்மாதகம க்ரீன் வீச் வரவேற்பு மண்டபத்தில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் கலந்து கொண்டு…
-
அமைச்சர் ஹக்கீம் – சோபித்த தேரர் சந்திப்பு!
ஹாசிப் யாஸீன் கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் கோட்டே ஸ்ரீ நாக விகாரை சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரை இன்று மாலை சந்தித்து முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
-
சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் சிகரம்: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள சிகரம் ஜூம்மா பள்ளிவாயல் இரண்டு மாடிக் கட்டடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது. 1978 ஆரம்பத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாந்த இப் பள்ளிவாயல் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையில் 1 கோடி
-
எதிர்க் கட்சித் தலைமைப் பதவி சிறுபான்மைகளுக்கான அங்கீகாரமாகும்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: இரா. சம்பந்தன் அவர்களுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைதிருப்பதானது சிறுபான்மை சமூகங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே அமைகின்றது என நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தெரிவித்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் அவர்கள் கையொப்பமிட்டு இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கான வாழ்த்துச் செய்தியிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அகதிகளுக்கு 600 கோடி டொலர் ஒதுக்கியது ஜெர்மனி
பேர்லின்: முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஜெர்மனிக்குள் வரும் பெருமளவிலான குடியேறிகளின் தேவைகளை சமாளிப்பதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டொலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றை ஜெர்மனி அறிவித்திருக்கிறது. அகதித்தஞ்சச் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளை கட்டுவது ஆகியவையும் இந்த திட்டன்களுக்குள் அடங்கும்.
-
“சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன் ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்”
அங்காரா: “சிறுவனை பார்த்தபோது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்’ என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார். சிரியாவின் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள் துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
-
விசாரணை அறிக்கைகளை கோரினார் பிரதமர்
கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் மற்றும் காணாமல் போனோர் பற்றி இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நிலை பற்றி தமக்கு அறியத்தருமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
-
ஜனாதிபதித் தேர்தல் இரகசியங்கள்…. ஐ.தே.க. மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்தார்
கொழும்பு: பாதுகாப்புக் காரணங்கள் இருந்த போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன் வீட்டிற்கு பாதுகாப்பாக ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற அந்த கட்சியின் 69வது ஆண்டு விழா மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
-
“கடுமையான போராட்டங்கள் வெடிக்கும்”: மஹிந்த தரப்பு எச்சரிக்கை
கொழும்பு: நாடாளுமன்றில் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் என ஒரு தொகுதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றச் சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு புறம்பான வகையில் எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்தமைக்கு எதிராக, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
-
காத்தான்குடியில் இடம்பெற்ற வாலிபர்களுக்கான இஸ்லாமிய மாநாடு
காத்தான்குடி: தஹ்வத் தப்லீக் அழைப்பு பணிக்காக இலங்கைக்கு வருகை தந்த சவுதி அரேபியா ரியாத் மலிகுஸ் ஸுஹுத் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விருவுரையாளர் கலாநிதி அஷ் ஷைக் மாஹிர் (Phd) அவர்கள் கலந்து கொண்ட வாலிபர்களுக்கான விசேட நிகழ்வு “SL Youth Muslim Organization” இன் ஏற்பாட்டில் நேற்று காத்தான்குடி மெத்தை பள்ளிவாயலில் சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ் .
-
அலையோடு சங்கமித்த ஐலான் குர்தி
மதியன்பன் எலும்புகள் இறுகி உடைவதையும் உதிரம் உறைந்து போவதையும் என்னால் உணர முடிகிறது.