Category: Your Kattankudy
-
சுகாதார அமைச்சராக அட்டாளைச்சேனை ஏ.எல்.எம்.நஸீர் பதவியேற்பு
சப்னி கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்நத அட்டாளைச்சேனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் சற்றுமுன் கிழக்கு மாகாண சுகதார அமைச்சை பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் சற்றுமுன் அதாவது மதியம் 3.30 மணியளவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
-
வாழ்வைத் தொலைத்துக் கொண்ட மனித குலமும், மகத்தான தூதை மறந்து விட்ட சிறந்த உம்மத்தும்
பிரபஞ்சம், அதில் எங்கோ இருக்கும் பால்வெளி மண்டலம், அதிலும் அடையாளம் காண முடியாத நமது சூரிய குடும்பம், நமது சிறிய கோள் புவி, தன்னைத் தானே ஒரு முறை சுற்றி, சூரியனை கோளப்பாதையில் சுற்றிவருதல், அதன்மூலம் இரவு பகல் மாறி வருதல், நாட்கள், வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள் என காலத்தின்த்தின் கணிப்பீடு, ஓசோன் மண்டலம், வளி மண்டலம், சூரியனின் கதிர்வீச்சு, ஆறு கடல், மழை நீர் , நீர் , நெருப்பு ,காற்று, கடலிலும் தரையிலும் உள்ள அனைத்து படைப்பினங்கள்,…
-
“ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு ஆபத்து”-மஹிந்த
கொழும்பு: இலங்கை தொடர்பில் ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைக்கு மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.அந்தத் தீர்மானத்தின் பல பத்திகள் மிகவும் ஆபத்தானவை என அவரது அறிக்கை கூறுகிறது.
-
மத்திய மாகாண சபை ஐ. தே. க. உறுப்பினர் ஹேரத் கைது
தம்புள்ள: மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான திஸ்ஸ பண்டார ஹேரத் நேற்று (25) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நபரொருவரைத் தாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப் பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
-
முல்லைத்தீவு தண்ணிரூற்று மு.ம.வித்தியாலய அதிபர் விடுத்துள்ள திறந்த அழைப்பு
முஹம்மட் ரிபாக் முல்லைத்தீவு: தண்ணிரூற்றுமுஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அமுதவிழா நடத்துவது மற்றும் அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 31ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அதிபர் ஏ.சி.ரியாஸ் தெரிவித்தார்.
-
“ஈராக் யுத்தத்திற்காக மனம் வருந்தி மன்னிப்புக்கோருகிறேன்” முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேய்ர்
MJ லண்டன்: 2003ம் ஆண்டு அமெரிக்க கூட்டுப்படையுடன் ஓர் பிரதான நாடாக இணைந்து அமைதியாக இருந்த ஈராக்கின் மீது, அணுஆயுத குற்றச்சாட்டைச் சுமத்தி, மேற்கொள்ளப்பட்ட ஈராக் யுத்தத்தில் பிரித்தானிய இராணுவம் முக்கிய பங்காற்றியது. அவ்வேளையில் பிரித்தானியாவின் பிரதமராக இருந்தவர் டோனி பிளேய்ர்.
-
இது மழையல்ல நிஜம்!
ஊரில் இன்றும் மழை நாளதான் வீட்டை விட்டு வெளியில் செல்ல.. மனமில்லை ரோட்டு வெள்ளம் ரோந்து போகிறது..
-
மட்டக்களப்பில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (23) இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன. குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில், மட்டக்களப்பு – பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களின் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
-
தற்போதய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ராஜபக்ஸ குடும்பம் மீண்டும் ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும்
கொழும்பு: அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் காரணமாக ராஜபக்ச குடும்பம் மீண்டும் அரசியலுக்குள் வரும் சந்தர்ப்பம் உருவாகும் என கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச அரசாங்கத்தை விட சேதம் ஒன்றை ஏற்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ராஜபக்சவை தோற்கடித்த அநீதியென மக்கள் சிந்திக்கக் கூடும்.
-
‘தாபிந்து முத்து’ முத்தான வியர்வை வர்த்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் மட்டக்களப்பில்
எம்.எச்.எம். அன்வர் மட்டக்களப்பு: திவினெகும திணைக்களத்தின் அணுசரணையில் “தாபிந்து முத்து”- “முத்தான வியர்வை” வர்த்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் மட்டக்களப்பில் நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் இன்று (24.10.2015) இடம்பெற்றது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் திவினெகும உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட கைப்பணிப் பொருட்கள் இனிப்பு பண்டங்கள் மிக்ஷர் வகைகள் பாய் பெட்டி வகைகள் மரக்கன்று வகைகள் சட்டி பானைகள் நெசவு சாரண் பெட்சீட் வகைகள் பூ வேலைப் பொருட்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டன.
-
மடத்தனமான இடுகைகளில் “மாஷாஅல்லாஹ்”!
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: போலிச் செய்திகளும், ஊர்ஜிதமற்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களிலும், இன்னும் சில பொய்ச்செய்திகளின் ஊடகங்களிலும் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகின்ற நிலையில், சமூகவலைத்தள பயனாளர்களும், இவ்வூடகங்களின் வாசகர்களும் தனது கண்களை இறுக மூடிக்கொண்டே “மாஷா அல்லாஹ்” என்று இடுகைகளையிட்டு, போலிச் செய்திகளுக்கும், ஊர்ஜிதமற்ற தகவல்களுக்கும் வலுசேர்ப்பது இன்றைய சமூகவலைத்தள வேடிக்கைகளில் ஒன்றாக மாறிவிட்டது.
-
“புலிதேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது”- ரணில்
கொழும்பு: இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப் புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் சீவரட்னம் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார்.