Category: Your Kattankudy
-
வட இந்திய வெள்ளம்: ஐநூறுக்கு மேற்பட்டோர் பலி!
மும்பே: வட இந்தியாவில் கடுமையான பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி ஐநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. பாலங்களும் சாலைகளும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை அடுத்து ஐம்பதாயிரம் பேர் வரையிலானோர் சிக்குண்டுள்ளனர்.
-
14வது வருட பூர்த்தியை முன்னிட்டு சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 14வது வருட பூர்த்தியை முன்னிட்டு சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களை கௌரவிப்பதற்கான வைபவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜே.பி தலைமையில் நடைபெற்றது.
-
உறுகாமத்தில் முஸ்லிம் வியாபாரி ஒருவரின் வியாபார நிலையமொன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற முஸ்லிம் கிராமமான உறுகாமத்தில் உள்ள முஸ்லிம் வியாபாரி ஒருவரின் வியாபார நிலையமொன்று இனந்தெரியாதோரால் நேற்றிரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
-
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நடமாடும் சேவை ஆரம்பம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன் பிடி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் நடமாடும் சேவையும் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களுக்கு அமைச்சின் அதிகாரிகளுடன்; விஜயம் செய்து அங்கு நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிவதுடன் உடன் நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
தமது அணி வெட்கப்பட வேண்டிய அணி அல்ல: மெத்தியூஸ்
கார்டிப்: நாணய சூழற்சியில் தோல்வியடைந்தமை மற்றும் திலகரத்ன டில்ஷான் உபாதைக்கு உள்ளானமை ஆகியனவே இந்திய அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் தமது அணி தோல்வியடைய முக்கியக் காரணமாக அமைந்தாக இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
-
‘வேலைவாய்ப்புக்களில் ஏமாற்றுதலில் இலங்கை நிலைமை மோசம்’
லண்டன்: வேலைவாய்ப்புக்கள் குறித்து பொய்ய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்களை ஏமாற்றி அழைத்துச் செல்லல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதுடன்,
-
பட்டதாரிகளுக்கான அலுவலக உபகரணம் வழங்கும் நிகழ்வும்.பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கௌரவிப்பும்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான அலுவலக உபகரணம் வழங்கலும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவிப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.
-
இன்றைய காலத்தில் சமூகக் குற்றங்களை ஒழித்துக் கட்ட அனைவரும் இன மத பாகுபாடின்றி பாரிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும் – மட்டு-அரசாங்க அதிபர் சார்ல்ஸ்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சமூகக் குற்றங்களை ஒழித்துக் கட்ட அனைவரும் இன மத பாகுபாடின்றி பாரிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார்.
-
கிண்ணியா தளவைத்தியசாலைக்கு கிரிக்கெட் உபகரணம் வழங்கள்
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா சைக்கா நிறுவனம் கிண்ணியாவிலுள்ள விளையாட்டு கழகங்கள் பலவற்றிற்கு அண்மையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைத்தது. இதில் கிண்ணியா தளவைத்தியசாலை கிரிக்கெட் அணிக்கும் கிரிக்கெட் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
-
பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை கையாள 2013-தேசிய உணவுக் கலாசார மேம்பாட்டுத்திட்ட வைபவம் மட்டக்களப்பில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கலாசார அலுவலகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய உணவுக் கலாசார மேம்பாட்டுத்திட்ட வைபவம் நேற்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
-
தனிநாட்டுக் கோரிக்கையை உலகம் இனிமேல் ஏற்காதென்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்
* கேள்வி : இன்று அரசாங்கத்துடன் இணக்கமாகப் போகும் நீங்கள், ஆரம்பத்தில் ஏன் ஆயுதம் ஏந்தினீர்கள்? பதில் : தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய 1980 காலகட்டத்தில் அதற்கான தேவை உண்மையிலேயே இருந்தது. எங்களிடம் இளமையும், வேகமும் இருந்தது. அதனால்தான் நாங்கள் ஆயுதம் தூக்கினோம். அப்போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எங்களுக்கு முழு ஆதரவு தந்தார். உண்மையிலேயே இந்திரா காந்தியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.
-
மாணவர்கள் கல்வித்துறையில் மேம்பட்டு விளங்க பாடசாலை ஆசிரியர்களின் முழுநேர பங்களிப்பு அவசியமாகும்- அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஒரு பாடசாலை கல்வித்துறையில் மேம்பட்டு விளங்க வேண்டுமானால் அங்கு பாடசாலை ஆசிரியர்களின் முழுநேர பங்களிப்பு அவசியமாகும் என காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலய அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தெரிவித்தார்.