Author: yourkattankudy.com
-
பொறுப்பற்ற செய்திகளை வெளியிட்டு இன, மத பூசல்களுக்கு தூபமிட வேண்டாம்: தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்
கொழும்பு: சாதி, மத பூசல்களை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு இன, மத பூசல்களுக்கு நாம் தூபமிடலாகாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி செயலகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்த போது தெரிவித்தார்.
-
மஹிந்த ராஜபக்ஷ ஒரு இனவாதி, இவரது ஆட்சியை வீழ்த்த வேண்டும், வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரவூப் ஹக்கீம் பேசுவது ஓர் நடிப்பு: ஹிஸ்புல்லாஹ்
– உப்புக்குளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறும் என்பதில் எந்தளவும் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ள பொருளாதார பிரதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா, வெற்றி பெருகின்ற அணியுடன் இணைந்து கொள்வோம் என்று அழைப்பும்விடுத்தார்.
-
SLMC வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை மேயர் தலைமையில் பிரச்சாரம்
– ஆசாத் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலைமையிலான மாநகர சபை உறுப்பினர்கள் ஏ.ஆர்.அமீர், ஏ.நிசார்டீன், ஐ.எம்.பிர்தௌஸ், எம்.எல்.சாலிதீன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
-
காத்தான்குடியா? பூநொச்சிமுனையா? சம்பியன் பட்டம் யாருக்கு?
– றிபாத் ஏ.எல். காத்தான்குடி: சியாத் பவுண்டேஷன் அனுசரணையுடன் நடாத்திவரும் ‘சம்பியன்ஸ் கிண்ணம் T20’ இறுதிப்போட்டி எதிர்வரும் 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2 மணிக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
-
அமைச்சர்கள் ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுத்தீன் ஆகியோர்களுக்கு ஓர் திறந்த மடல்!
அஸ்ஸலாமு அலைக்கும் இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு இருந்து வரும் பேரினவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், சமூகத்தை துச்சமென மதித்து, அரசாங்கத்தின் ஆசனத்தில் அங்கத்துவம் பெற்றுவரும் அமைச்சர் ரவூப் ஹகீம், மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் ஆகியோர்களுக்கு இந்த திறந்த மடலை எழுதுகிறேன்.
-
‘தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படும் அபாயம்” – நிர்வாகத்தினர்
தம்புள்ள: மாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி,
-
வன்முறையாளர்களிடம் சிக்காமல் 150 முஸ்லிம் பெண்கள், குழந்தைகளைக் காத்த சிங்!
– OiT முசாபர் நகர், உ.பி: ‘ஜாட்’ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், வன்முறை மூண்டுள்ள முசாபர் நகர் பகுதியில், வன்முறையாளர்களிடம் சிக்கி விடாமல், முஸ்லீம்கள் 150 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளார். இந்த 150 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
-
ஆப்கானிஸ்தான் கால்பந்துக் குழுவுக்கு காபூலில் உற்சாக வரவேற்பு
காபூல்: ஆப்கான் தேசியக் கால்பந்துக் குழு தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்குழுவை வரவேற்க தலைநகர் காபூலில் ஆயிரக்கணக்கான ஆப்கானிய கால்பந்து ரசிகர்கள் குழுமியிருந்தனர். ஒரு சர்வதேச விளையாட்டுப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்வது இதுவே முதல் முறை.
-
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாணத்திலிருந்து துறத்தியடிக்கப்பட வேண்டும்’ -எம்.எஸ்.சுபைர்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண மக்களுக்கு பெரும் துரோகத்தனத்தை செய்வதாகவும்அக்கட்சியினை இம்மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்..சுபைர் தெரிவித்தார்.
-
தேர்தல் தெரு விழா
– பிரகாசக்கவி எங்கள் ஊரு சந்துபொந்தெல்லாம்.. பச்சை என்றும் பச்சை மஞ்சள் என்றும் நீளம், சிவப்பு என்று கலர் கலராய் !
-
‘சர்வதேசத்துக்கு பொய்யுரைப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாகும்’ – ஹூனைஸ் பாருக்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா முல்லைத்தீவு: வடக்கில் இனவாதத்தின் மூலம் எதனையும் எவருக்கும் பெற்றுக் கொடுக்க முடியாது, முடியுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களு்க்கு ஒரு வீட்டின் கல்லையாவது பெற்றுக் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், சர்வதேசத்துக்கு பொய்யுரைப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் கூறினார்.
-
சாய்ந்தமருது விதாதா வள நிலைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – 2013
– றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவின் விதாதா வள நிலையத்தினால் நடாத்தப்பட்ட 3மாத, 6மாத கால கணணிப் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் MM. சாக்கீர் தலைமையில் இடம்பெற்றது.