சாய்ந்தமருது: தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவின் விதாதா வள நிலையத்தினால் நடாத்தப்பட்ட 3மாத, 6மாத கால கணணிப் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் MM. சாக்கீர் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதீதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ALM. சலீம் அவர்களும் சிறப்பு அதீதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் AL. அப்துல் மஜீட் அவர்களும்; சாய்ந்தமருது, பிரதேச செயலக ஊழியர்களும் மற்றும விதாதா வள நிலைய ஊழியர்களும் கழந்து கொன்டணர்.
இன் நிகழ்வில் 50க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இப் பயிற்சி நெறியானது முற்றிலும் இலவசமாக நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.




Leave a comment