Author: yourkattankudy.com
-
‘சிப்தொர’ புலமைப்பரிசில் வழங்கும் மன்னார் மாவட்டத்திற்கான நிகழ்வு
மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: வறுமையினால் பாதிப்படைந்த குடும்பங்களின் மாணவர் கல்வி மேம்பாட்டிற்காக சமுர்த்தி உணவு முத்திரை பெறுகின்ற குடும்பங்களில் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு செய்கின்ற குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 233 மாணவர்களுக்கு சமுர்த்தி ‘சிப்தொர’ புலமைப்பரிசில் வழங்கும் மன்னார் மாவட்டத்திற்கான
-
ஸ்ரீ .ல.மு. மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு
பழுளுல்லாஹ் பர்ஹான் சிலாபம்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு சிலாபம், கொட்டாரருமுல்லை அல் – ஹிரா மகா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (02) இடம்பெற்றது.
-
வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் அவர்களின் முஹர்ரம் செய்தி
PMGG ஊடகப்பிரிவு இன்றைய சூழ்நிலையில் இந்த தேசமும், முஸ்லிம் சமூகமும் ‘வினைத்திறனுடன் சிந்திக்கின்ற, தூரநோக்குடன் விடயங்களை அணுகுகின்ற மக்களின் நன்மைக்காக அர்ப்பணத்துடன் உழைக்கின்ற’ ஒரு அணியினரின் அவசியத்தை எதிர்பார்த்து நிற்கின்றது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சார்பிலான
-
மாணவ கலாசார பேரணியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி
கொழும்பு: பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள 53 நாடுகளின் கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்களுடைய பேரணியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
-
அதிவேக வீதியில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம்
கொழும்பு: அதிவேக வீதிகளில் வாகனங்களை செலுத்தும் பஸ், வேன் சாரதிகளுக்கான விசேட வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதென மோட்டார் வாகன ஆணையாளர் எஸ். ஹரிஸ்சந்திர தெரிவித்தார். கண்டி வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்டி பிரதேச சாரதி பயிற்சி நிறுவன உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரை தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
அமெரிக்க இராணுவ கொடூரங்களுக்கு துணைபோன மருத்துவர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், பயங்கரவாத சந்தேகநபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
-
சவூதியில் சட்டவிரோத பணியாளர்களுக்கு எதிரான தேடுதல் ஆரம்பம்
ரியாத்: சட்டவிரோத வெளிநாட்டுப் பணியாளர்களையும், அவர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்களையும் தேடும் நடவடிக்கையை நாடெங்கும் பாதுகாப்புப் படையினர் இன்று ஆரம்பிக்கவிருப்பதாக சவுதி அரசாங்கம் கூறியுள்ளது. புதிய வேலைவாய்ப்புச் சட்டம் ஒன்று வந்ததை அடுத்து அமலுக்கு வந்த ஒரு வெளிநாட்டு பணியாளர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
-
காங்கேயனோடை பிரதேச 50 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலை வழங்கும் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காங்கேயனோடை: மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட காங்கேயனோடை பிரதேச வறிய மக்களுக்கு இலங்கை நீர்வழங்கள் சபையினால் வழங்கப்படும் குடிநீரினை இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கான காசோலை வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காங்கேயனோடை அல்-அக்ஸா மண்டபத்தில் பிரதேச அபிவிருத்தக் குழுவின் தலைவர் முகம்மட் முஜாகித் தலைமையில் இடம்பெற்றது.
-
சவூதியில் இரு இடங்களில் கடந்த 12மாத காலப்பகுதிக்குள் 810பேர் புனித இஸ்லாத்தை தழுவிக் கொண்டுள்ளனர்
– பழுளுல்லாஹ் பர்ஹான் யன்பு: சவூதி அரேபிய நாட்டில் யன்பு இன்டஸ்ரியல் பகுதியில் வேலை செய்யும் பல நாடுகளை சேர்ந்தவர்களில் இஸ்லாமிய மாத கணிப்பீட்டின் படி முஹர்ரம் மாதத்திலிருந்து துல்ஹஜ் கடைசிவரை அதாவது கடந்த 12 மாத காலப்பகுதிக்குள் 335 பேர் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளதாக யன்பு அஸ்ஸினாய்யா தஃவா நிலையத்தின் பல மொழிகளுக்குமான ஒருங்கிணைப்பாளர் உமர்லெப்பை ஹபீபுர்ர்ரஹ்மான் தெரிவித்தார்.
-
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது விபத்து
கொழும்பு: கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று பகல் 1.50 மணியளவில் இந்தச் சம்ப வம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பதிவான முதலாவது விபத்திச் சம்பவம் இதுவாகும்.
-
சவூதி வழங்கிய பொது மன்னிப்புக் காலம் நிறைவு
ரியாத்: சட்டவிரோதமாக சவூதி அரேபியாவில் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. குறித்த பொது மன்னிப்புக் காலத்தில் 10,000 பேர் வரையில் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
-
தன் கனவு நனவாகும் சில மணித்தியாலங்களுக்குள் கொல்லப்பட்ட இலங்கை மாணவன்! இங்கிலாந்தில் பரிதாப சம்பவம்!!
– MJ செப்ஃபீல்ட்: பல பெற்றோர்களுக்கு இருக்கும் கனவுகள் போல்தான் தன் பிள்ளையை படித்து ஆளாக்க வேண்டும் எனும் அவாவுக்கமைய இலங்கையில் படிக்கவைத்து, பின்னர் இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் ஓர் பட்டத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் தனது மகனை அனுப்பிவைத்த பெற்றோர், தனது பிள்ளையின் சடலத்தைக் காண்பதற்கு தற்பொழுது இங்கிலாந்து, செப்ஃபீல்ட் நகருக்கு செல்லும் நிலை தோன்றி இருக்கின்றது.