Author: yourkattankudy.com
-
குவைத்தில் 9ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 9ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்! காயல் மவ்லானா அ. அஹ்மத் அப்துல் காதர் மஹ்ழரி ஹழ்ரத் மற்றும் ஆவணப் பட இயக்குநர் ஆளூர் ஷா நவாஸ் சிறப்புரை!!
-
ஒபாமாவை கொல்ல முயற்சித்தவருக்கு மரண தண்டனை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கொலை செய்வதற்காக 75 வயது பாட்டியைக் கொலை செய்து காரை திருடிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு வாஷிங்டனில் இருந்த அதிபர் ஒபாமா மீது காரை ஏற்றிக் கொல்ல திட்டமிட்டதாக மேக்வே (44) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மங்களராம விகாரையில் விஷேட வழிபாடு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஓவ்வொறு வருடமும் மே மாதம் பௌர்ணமி முழு நிலா தினத்தன்று உலகிலுள்ள அனைத்து பௌத்தர்களாலும் கொண்டாப்படும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விஷேட வழிபாடு நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்றது.
-
தம்புள்ள பள்ளி விவகாரம்: மத விவகார விசேட பொலிஸார் நேரில் சென்று விசாரணை
தம்புள்ள: தம்புள்ள ஜும்ஆபள்ளி வாசல் தொடர்பாக மத விவகாரங்களுக்கான விசேட பொலிஸ் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அப்பிரதேசத்துக்கு பொலிஸ் பிரிவின் மூன்று உயரதிகாரிகள் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
-
நஷ்டத்தில் சொனி நிறுவனம்
டோக்யோ: உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சொனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
-
சவுதியில் கார் ஓட்டியதற்காக மனைவியை விவாகரத்து செய்த கணவர்
– SHM றியாத்: சவுதியில் கார் ஓட்டியதற்காக மனைவியை ஒருவர் விவாகரத்து செய்துள்ளார்.சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் ஒன்று பெண்கள் வாகனம் ஓட்ட தடை. இந்நிலையில் சவுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கார் ஓட்டி அதை வீடியோ எடுத்து ‘வட்ஸ்அப்’ மூலம் தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து அவர் அந்த வீடியோவை அனுப்பியுள்ளார்.
-
துருக்கி நிலக்கரி சுரங்க வெடிவிபத்து: 201 பேர் பலி: பலர் படுகாயம்
– S-90 இஸ்தான்புல்: மேற்கு துருக்கியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து மற்றும் தீ காரணமாக பலியானோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் டேனர் இல்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-
சூனியக்காரி சாயலில் இருந்த பிரேசில் பெண் அடித்துக் கொலை: முகநூல் புகைப்படத்தால் விபரீதம்!
– S-90 ரியோ டி ஜெனிரோ: முகநூலில் வெளியான சூனியக்காரியை போன்ற முகச்சாயலில் இருந்ததால் பிரேசிலில் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார்.பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவை சேர்ந்த பேபினோ மரியா (33) என்ற பெண் மீது குழந்தைகளை கடத்துகிறார் என்ற குற்றம் சாட்டப்பட்டது.
-
இலங்கையின் முதலாவது செய்மதி தொலைக்காட்சி சேவை ஆரம்பம்
கொழும்பு: இலங்கையில் முதன்முறையாக செய்மதி மூலமான மும்மொழி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த 30 வருட கால போரின் பின்னர் இலங்கை பெற்றுள்ள பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை உலகுக்கு அறிவிக்கும் வகையில் இந்த தொலைக்காட்சி சேவை ஒளிபரப்புகளை மேற்கொள்ளவிருக்கிறது.
-
காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தின் 2014 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தின் 2014 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 13-05-2014 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் ஜனாபா ஜெஸீமா முஸம்மில் தலைமையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.
-
தங்காலையில் 58 ஏக்கரில் நவீன சிறைச்சாலை
கொழும்பு: தங்கால அகுனுகொலபெலஸ்ஸவில் 4996 மில்லியன் ரூபா செலவில் புதிய சிறைச்சாலையொன்றை நிர்மாணிக்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. 58 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிறைச்சாலை நிர்மாணிப்பதற்காக நாளை மறுதினம் (16) அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
-
புகைத்தலிலிருந்து மக்களை விடுவிக்கும் பணிகள் தொடரும்
கொழும்பு: சிகரெட் பெட்டியில் புகையிலை பாதிப்பு தொடர்பான படங்களை பிரசுரிப்பது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் மதிக்கிறோம். ஆனால் பாராளு மன்றத்தினால் 80 வீதம் படங்களை பிரசுரிக்க அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் 50 முதல் 60 வீத பகுதியிலே பாதிப்பு படங்களை பிரசுரிக்க முடியும் என வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தொடர்பில் திருப்தி அடைய முடியாது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.