Author: yourkattankudy.com
-
புதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம் வாழ்த்து
– பழுலுல்லாஹ் பர்ஹான் மாத்தளை: இந்தியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மோடி முன்கொண்டுசெல்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
‘நாட்டில் அரங்கேறும் திட்டமிட்ட இனவாத முன்னெடுப்புகளுக்கு எதிராக களமிறங்கியுள்ள பெரும்பான்மை முற்போக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்’-வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்
– PMGG ஊடகப்பிரிவு ‘இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு அதனடியாக ஆயுத கலாசாரத்தையும், இராணுவ நடவடிக்கைகளையும், அவசரகால, பயங்கரவாத தடைச் சட்டங்களையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கச்செய்து, அப்பாவி சிங்கள மக்களின் உள்ளங்களில் ஏனைய இனத்துவங்கள் குறித்த ஐயப்பாட்டினை தொடர்ந்தும் தக்கவைப்பதன் மூலம் தம்முடைய குடும்ப, சர்வாதிகார ஆட்சியை தக்கவைக்க முடியும் என ஒரு சிலர் கணக்குப்போட்டு செயற்படுவது வெள்ளிடைமலையாகப் புலப்படுகின்றது.
-
பிரேசில் உலகக்கிண்ணத்திற்கு மக்கள் எதிர்ப்பு : எரிகிறது தலைநகரம்!
– SHM ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் உலககிண்ண காலபந்து போட்டிகளை நடத்துவதற்கான செலவுகளை கண்டித்து சாவொ பவுலோவிலும், ரியோ டி ஜெனிரோவிலும் நடந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்தனர்.
-
‘உலகக் கோப்பை போட்டி இடமாக கத்தார் தேர்வானது ஒரு தவறு’
லண்டன்: கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளை 2022-ம் ஆண்டில் கத்தாரில் நடத்துவது என்பது தவறாக எடுக்கப்பட்ட முடிவு என்று உலக கால்பந்து போட்டிகளின் நிர்வாக அமைப்பான ஃபிஃபாவின் தலைவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் கட்சியை சேராத 8வது பிரதமர் நரேந்திர மோடி!
– S-90 டெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேராத 8வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார்.நமது நாடு இதுவரை 13 பிரதமர்களை சந்தித்துள்ளது. இதில் 16 ஆண்டுகாலம் நாட்டின் பிரதமராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார்.அவருக்குப் பின்னர் குல்சாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி பதவி வகித்தனர்.
-
மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து: இலங்கைக்கு வருமாறு அழைப்பு
– S-90 கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே வரும் 21ம் தேதி பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது.
-
மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி
கல்முனை: சாய்ந்தமருது வலய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி கல்முனை, சாய்ந்தமருது வலய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி ஒன்றை கண்ணியமிக்க சமுதாயத்தை அடையாளப்படுத்தும் அமையத்தின் AIMS உளவியல் மற்றம் வழிகாட்டல் பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது.
-
மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தொடர்பாக பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ,பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இணைந்து விடுக்கும் முக்கிய அறிவித்தல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தொடர்பாக பொது மக்களுக்கு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ,பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இணைந்து காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள ஜூம்மா பள்ளிவாயல்களில் 16-05-2014 இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் விடுத்த முக்கிய அறிவித்தல் கடிதம் எமது வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
-
“இலங்கை ராணுவம் மாணவர்களுக்கு கட்டாய பௌத்த தலைமைத்துவ பயிற்சியளிக்கும்”
கொழும்பு: இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் அளிப்பதற்கான முன்னெடுப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
-
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கட் சமர்: அடுத்த 8 ஆண்டுகளுக்குள் ஆறு மெகா தொடர்கள்!
– அபூஸைனப் லாகூர்: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி மட்டுமல்லாமல் உலக இரசிகர்களுக்கும் மற்றும் விளம்பரதாரர்களுக்கும் ஓர் நற்செய்தியாக அமையவிருக்கின்றது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்.
-
மலாலாவை வைத்து சர்ச்சை விளம்பரம் வெளியிட்ட இந்திய நிறுவனம்
– S-90 மும்பை: இந்தியாவைச் சேர்ந்த பிரபல மெத்தை நிறுவனம், பாகிஸ்தான் சிறுமியான மலாலா சுடப்படுவது போன்ற விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள கார்ட்டூன் படம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. எதிர்ப்பும் எழுந்துள்ளது.
-
மட்டக்களப்பில் வெசாக் தோரணங்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வெசாக் தினத்தில் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று சுமார் 14 வருடங்களுக்கு பிறகு மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் பாரிய வெசாக் அலங்கார தோரணை நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.