Author: yourkattankudy.com
-
திக்ரிட் நகரின் ஒருபகுதி கைப்பற்றியது ஈராக் படை!
பக்தாத்: இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரிட் நகரின் ஒருசில பகுதிகளை ஈராக் இராணுவம் மீட்டுள்ளனர். ஈராக் துருப்பினரின் முன்னேற்றத்தை தடுக்க ஐ.எஸ். நகரெங்கும் குண்டுகளை வெடிக்கச் செய்வதாக ஈராக் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக அரச படை திக்ரிட் நகரின் வடக்கு எல்லையில் இருக்கும் அல் அலாம் நகரை கைப்பற்றி இருந்தது.
-
சவுதி-சுவீடன் ராஜதந்திர மோதல்: தனது தூதுவரை திரும்பிவர சவுதி உத்தரவு!
றியாத்: சவுதி அரேபியாவுக்கும் சுவீடனுக்கும் இடையேயான ராஜீய மோதல் வலுத்துவரும் வேளையில், சுவீடனுக்கான தமது தூதரை திரும்பிவரும்படி சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் நிலவும் மனித உரிமைகள் குறித்து சுவீடன் செய்திருந்த விமர்சனங்களினால் கோபமடைந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுவீடனின் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
-
தேர்தல் நடைமுறையில் மாற்றம் வருகிறது
கொழும்பு: அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.தற்போது இருக்கும் விருப்ப வாக்கு நடைமுறை காரணமாக, தேர்தல்களில் பல்வேறு சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, கட்சிகளுக்கு உள்ளேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன அதன் காரணமாக தேர்தல்
-
சகோதரனாக இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக்கூறிய ஜனாதிபதியின் ஆட்சி இது: சுதந்திர எழுத்தாளர் றிபாய்
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அட்டாளைச்சேனை: அதிமேதகு ஜனதிபதி மைத்திரிபல சிறீசேனவின் சகோதரர் வனவிலங்கு அதிகாரிகளின் சேவைக்கு இடையூறு விளைவித்தார் என்று தெரிந்தவுடன் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டது தானே எனக் கூறியதாக ஒரு வருடத்துக்கு முன் வெளிவந்த சுடர் ஒளி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
-
இளைப்பாறுகிறார் கிராம சேவகர் YLM. இப்றாஹிம் (GS) அவர்கள்
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: எதிர்வரும் மே மாதம் 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள YLM. இப்றாஹிம் (GS) அவர்கள் 10 வருடங்கள் ஆரையம்பதி பிரதேச செயலகத்திலும் 15 வருடங்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் கடமையாற்றியதுடன் பல நாடகங்களில் நடித்த பிரபல கலைஞராவார்.
-
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரிக்கு ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியும் அதன் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் புதிய சரீஆ பிரிவுக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
பாலியல் புகாரில் இருந்து தப்பிய Bபங்காளி வீரர் ஹொஸைன்
டாக்கா: பங்களாதேஷ் வீரர் ரூபெல் ஹொசைன் மீது அளித்துள்ள பாலியல் புகாரை அவரது காதலி வாபஸ் பெற்றுள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், பந்துவீசிய பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய வங்கதேச பந்துவீச்சளார் ரூபெல் ஹொசைன் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர்கள் இயர்ன் பெல், அடுத்து அணித்தலைவர் மோர்கன் ஆகியோரை வீழ்த்தினார்.
-
“நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை வரவேற்கிறேன்”: பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டை தான் வரவேற்பதாகவும், அதற்காக நன்றி கூறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
கெளரவ கிழக்கு மாகண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களுக்கு ஒரு ஆக்க பூர்வமான மடல்
ஏ. எம். பர்ஸாத் காத்தான்குடி: உங்கள் அரசியல் பயணத்தின் நான் அறிந்து கொண்ட சில பக்கங்கள். 2010 ம் ஆண்டு கிழக்கு மாகண சபை தேர்தலில் முன்னால் பிரதி அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மூலம் அரசியலுக்கு வந்த நீங்கள் அன்றில் இருந்து இன்று வரை சுயதீனமாக செயற்படுவதாகவும் MLAM. ஹிஸ்புல்லாஹ்வோடு இணையும் போது நிபந்தனையோடு இணைந்ததாகவும், அந்நிபந்தனைகளிள் நீங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு ஹிஸ்புல்லாஹ்வின் தலையீடுகள் இருக்கக் கூடாது என்றும் மார்க்கத்திற்கும் அரசியலுக்குமான போராட்டம் என்று வந்தால் அதில்…
-
பிரதமர் மோடியின் வருகையும் அதனது மறுமுகம் தொடர்பிலான எதிர்வு கூறலும்
வன்னிக் குரலான் கொழும்பு: இலங்கையும் – இந்தியாவும் கொண்டுள்ள நெருக்கமும், இருக்கமுமான உறவை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதிலும், இலங்கையில் தற்போது புதிய அரசு ஏற்படுத்திவரும் மாற்றம் தொடர்பில் அளவீடு செய்வதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் பிரதான நோக்கங்களாக காட்டப்பட்ட போதிலும், அதற்கு மாறானதொரு உண்மையாக இலங்கை – சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கத்தால் அயல் நாடான இந்தியா எதிர்காலத்தில் எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கண்ணம் வைக்கும் ஒன்றாகவே இந்த விஜயம் அமைக்கின்றது என்பது அரசியல்…
-
காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரி. கௌரிசங்கரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம்
நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக கடந்த ஒரு வருடகாலமாக கடமையாற்றிய டாக்டர் ரி. கௌரிசங்கரன் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.