Author: yourkattankudy.com
-
காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில்
ஏ. எல். டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி, பாலமுனை, காங்கயனோடை, சிகரம், ஒல்லிக்குளம், மஞ்சந்தொடுவாய் சேர்ந்த சுமார் 30 பாடசாலைகளின் மாணவ மாணவிகளின் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 16.03.2015 திங்கட்கிழமை பி.ப. 03.00 மணிக்கு காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் தலைமையில் நடைபெற உள்ளது.
-
‘கிழக்கில் ஒரு நல்லிணக்க ஆட்சியினை ஏற்படுத்துவதற்கு சரியான நேரத்தில் NFGG வழங்கிய பங்களிப்பு என்ன..?’ விபரிக்கிறார் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையில் அனைவரும் வரவேற்கத்தக்க ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் எற்பட வேண்டும் என மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டு அரசியலின் நம்பிக்கைக்குரிய தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது.
-
பிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்
பழுலுல்லாஹ் பர்ஹான் / டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரும், மொடன் ஜூவலரி உரிமையாளரும், சமூக சேவையாளருமான யூ.எல். அஹமட் மொஹிடீன் ஹாஜியார் 12-03-2015 இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் கொழும்பு ஆசிரி தனியார் வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.
-
முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் NFGG தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமா..? கே.எல்.எம்.பரீட் பகிரங்க சவால்
ஏ.எல்.டீன் பைரூஸ் காத்தான்குடி: முன்னால் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படா விட்டால் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தனது அரசியல் நடவடிககைகளைில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான கே.எல்.எம். பரீட் ஜே.பி தெரிவித்தார்.
-
பொறியியலாளர் சிப்லிக்கு பகிரங்க பதில் : எழுதியது நானல்ல: வை.எல்.எம். இப்றாஹிம் ஜி.எஸ்.ஓ தெரிவிப்பு
டீன் பைரூஸ் காத்தான்குடி: கடந்த 20.2.2015 அன்று காத்தான்குடியிலிருந்து வாராந்தம் வெளிவரும் வாராந்த பத்திரிகை ஒன்றில் பொறியியலாளர் சிப்லிக்கு பகிரங்க பதில் எனும் தலைப்பிட்டு முன்பக்கத்தில் ஒரு கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த கட்டுரையின் இறுதியில் வை.எல்.எம். என பெயரிடப்பட்டிருந்தது.
-
கோட்டாவைக் கைது செய்யக் கோரிக்கை
கொழும்பு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய நிறைவேற்றுப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
-
ஹைராத் வித்தியாலயத்தின் அபிவிருத்தியில் NFGG கவனம் செலுத்தியுள்ளது
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: புதிய காத்தான்குடி கைராத் வித்தியாலயத்திற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிரதிநிதிகள் விஜயம் ஒன்றை கடந்த (09.03.2015) அன்று மேற்கொண்டனர். இந்த விஜயத்தின்போது NFGGயின் காத்தான்குடி பிரதேச தலைமைத்துவசபை உறுப்பினர்களான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார், MACM.ஜவாஹிர், MHA.நஸீர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர் அனீஸா பிர்தௌஸ் ஆகியோருடன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
-
பாம் வீதியினை சொந்த நிதியில் செப்பனிடுவதற்கு NFGG முன்வந்துள்ளது
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: புதிய காத்தான்குடி, பரீட் நகர், பாம் வீதி மிகவும் படுமோசமாக காணப்படுகின்றமையால் மக்களின் தேவை கருதி இதனைத் தற்காலிகமாக தமது சொந்த செலவில் செப்பனிட்டுக் கொடுப்பதற்கு NFGG முன்வந்துள்ளது. இதற்கான அனுமதி உடனைடியாக வழங்குமாறு காத்தான்குடி நகரசபையிடம் NFGG கோரியுள்ளது.
-
காணவில்லை
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரி வீதி, ஏறாவூர் -3A ஐ சேர்ந்த சம்மூன் குட்டி முஹம்மது ரஷீத் (வயது -29) என்பவர் சென்ற திங்கட்கிழமையிலிருந்து (09-03-2015) காணாமல் போயுள்ளார்.
-
கட்டாரில் “ இறைத் தரிசனம் ” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி (12-03-2015) வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நாளை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழா 13-03-2015 நாளை வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஜாமிஆ கடைத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.