Author: yourkattankudy.com
-
பொஸ்டன் குண்டு வெடிப்பு: மக்களை வீட்டுக்குள் இருக்குமாறு பொலிஸ் உத்தரவு: கொலையாளிகளில் ஒருவர் பலி! தேடுதல் வேட்டையில் பொலிஸார்!!
-MJ பொஸ்டன்: பொஸ்டன் நகர் குண்டு வெடிப்பில் கொலையாளிகள் என நிரூபிக்கப்பட்ட இருவரை இன்று காலை தொடக்கம் அமெரிக்க பொலிஸாரும், எப்.பி.ஐ யும் இணைந்து பொஸ்டன் நகரில் தேடுதல் வேட்டையை இன்று மேற்கொண்டிருந்தனர்.
-
தனியார் பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டை அறிமுகம்!
கொழும்பு: தனியார் பஸ்களில் கட்டணங்களை செலுத்த பணத்திற்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்தும் திட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் செயற்படுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
-
இனந்தெரியாத ஆயுததாரிகளினால் முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசனின் வீடு தாக்கபட்டு சேதம்: ஆரையம்பதி இராசதுரை கிராமத்தில் சம்பவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இராசதுரை கிராமம்-03ல் அமையப் பெற்றுள்ள கோணமலை கண்ணதாசன் (வயது 36) என்பவரின் வீடு நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாதோரினால் ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டு அங்குள்ள உடைமைகளுக்கும் பொருட்களுக்கும் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது.
-
பொஸ்டன் குண்டு வெடிப்பு சூத்திரதாரிகள் இருவரின் படங்களை எப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.
-MJ அமெரிக்கா: பொஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியின் நிறைவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதுடன் 100க்கும் அதிகமானோர் காயப்பட்டிருந்தனர்.
-
நீதிபதிகளை சிறைபிடித்த வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கைது!
-OIT இஸ்லாமாபாத்: நீதிபதிகளை கூட்டாக சிறை வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று பிற்போட்டது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
பொது பல சேனாவின் முஸ்லிம்கள் மீதான ஜிஹாத் குற்றச்சாட்டுக்களும் எதிர்பார்ப்புக்களும்!
– AF47 கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை இலங்கையில் இருக்கும் 15 முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளையும் அலரி மாளிகைக்கு அழைத்து, இந்நாட்டில் முஸ்லிம்கள் எவ்வித அச்சமும் இன்றி, சம உரிமைகளுடன் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.
-
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒன்றுபட்டு உதவி புரிய முன்வர வேண்டும்: எஹியான்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா முசலி: முசலி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று பிரதேச சபை கட்டிடத்தில் பிரதேச சபை தலைவர் தேமசமான்ய எஹியான் தலைமையில் கூடியது.இக் கூட்டத்தின் போது சபை தலைவர் எஹியான் விசேட பிரேரனையொன்றை சமர்பித்து அதனை சபை உறுப்பினர்களின் ஏக அங்கீகாரத்தை பெற்றார். இந்த பிரேரணையினை சபையில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எக மனதாக ஏற்றுக் காண்டனர்.
-
வீதிக்கு வந்த கிண்ணியா T.B.ஜாயா வித்தியாலயத்தின் மாணவர்கள்
– பஹ்மியூஸூப் கிண்ணியா: இடவசதியற்ற நிலையில் வேறு கட்டடமொன்றில் இயங்கிவரும் கிண்ணியா T.B. ஜாயா வித்யாலயத்தின் மாணவிகளும் அவர்களது பெற்றோரும் 18.04.2013 புதன்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
-
மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது!
-அமைச்சர் கெஹெலிய கருத்து- கொழும்பு: அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டம் சகல கிராமங்களிலும் அமுல்படுத்தப்படுவதாலும் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாத காரணத்தினாலும் மின் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாதுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
-
அணுகுண்டு வெடிப்பின் தாக்கத்தை ஒருமித்த அமெரிகாவின் தீ விபத்து! 15 பேர் பலி!!
-MJ- டெக்ஸாஸ்: அமெரிக்காவில் மிக மோசமான தீ விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வேக்கோ என்ற ஊர் அருகே உரத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து நடந்த பெரிய வெடிச் சம்பவத்தில் 15 பேர் வரையிலானவர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருக்கின்றனர்.
-
பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று தொப்பிகலை இராணுவ நினைவுத்தூபியை திறந்து வைப்பு-
தொப்பிகலையில் இருந்து ஊடகவியலாளர் பழுளுல்லாஹ் பர்ஹான் தொப்பிகலை: இலங்கை இராணுவத்தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அனுசரணையின் கீழ் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் அழைப்பின் பேரில் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொப்பிகலையில் (குடும்பிமலையில்) நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவுத்தூபியை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
-
தமிழ்-முஸ்லிம் இரு இனங்களும் பாரிய புரிந்துணர்வுடன் செயலாற்ற வேண்டிய காலத்தின் கட்டாயம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அரசியல் வரலாற்றுத் துரை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸ் அவர்களினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவத்தையும் இங்கு தருகின்றோம். தொகுப்பு – இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கையின் முப்பது வருடகால விடுதலை போராட்டமானது ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றுதான் பல நூற்றாண்டு காலமாக அன்னியோன்யமாக வாழ்ந்து வந்த தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டு அரசியலும் அதனுடன் வளர்ந்த இனவாதமுமாகும்.