பொஸ்டன் குண்டு வெடிப்பு சூத்திரதாரிகள் இருவரின் படங்களை எப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.

19-1366349604-boston-suspects--2-600[1]-MJ

அமெரிக்கா: பொஸ்டன் நகரில் மரதன் ஓட்டப்போட்டியின் நிறைவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானதுடன் 100க்கும் அதிகமானோர் காயப்பட்டிருந்தனர்.

இக்குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் எனக் கருதப்படும் இருவரின் புகைப்படங்களை எப்.பி.ஐ (F.B.I.) நேற்று மாலை வெளியிட்டிருக்கின்றது.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்திற்கு தோளில் பைகளுடன்  வரும் இவ் இரு நபர்கள் இரகசிய சி.சி.டி.வி (CCTV) கமெராவில்  வீடியோ மூலமாக படம் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். மேலதிக விசாரணைகளை எப்.பி.ஐ. துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

19-1366349604-boston-suspects--2-600[1]

Published by

Leave a comment