Author: yourkattankudy.com
-
இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர்
கொழும்பு: இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இம்மாதம் 23ஆம் திகதி மஹரகமை தேசிய இளைஞர்கள் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெறுமென இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
-
சவூதியிலுள்ள இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள்!
கொழும்பு: பொது மன்னிப்பின் பேரில் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும் இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்க சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
ஐரோப்பாவில் நிறைவடைந்துள்ள சிரேஷ்ட உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் ஒரேபார்வையில்
-MJ * இங்கிலாந்து- மன்செஸ்டர் யுனைட்டட் * ஸ்பெயின்- பார்சிலோனா * பிரான்ஸ்- பரிஸ் எஸ்.ஜி * ஜேர்மனி- பேயர்ன் மியூனிச்
-
“இலங்கையில் மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் இன்னும் இடமில்லை”
லண்டன்: இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.
-
ஸ்பொட் பிக்ஸிங் ஸ்ரீசாந்தின் அந்தரங்கங்கள்….
– OIT டெல்லி: மும்பை ஹோட்டலில் அழகிகளுடன் இருந்ததை ரகசியமாக படம் எடுத்து, அதன் மூலம் ஸ்ரீசாந்த்தை சூதாட்டத்தில் ஈடுபடும்படி மிரட்ட தரகர்கள் திட்டமிட்டு இருந்தது பொலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகியுள்ள வீரர்கள் மற்றும் தரகர்களிடம் டெல்லி தனிப்பிரிவு பொலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இன நல்லுறவைப் பேணும் முகமாக மட்டு-முஸ்லிம் சகோதரர்களினால் பள்ளிவாயலில் பிரியாவிடை பெற்ற மட்டக்களப்பு விமானப் படை முகாம் பொறுப்பதிகாரி அஜித் வெவேகம
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமானப் படை முகாம் பொறுப்பதிகாரி வின்கெமாண்டர் டப்ளியூ. எம். ஏ. பீ. அஜித் வெவேகம பதவியுயர்வு பெற்று கொழும்புக்கு செல்வதையிட்டு இன நல்லுறவைப்
-
மாகாண அமைச்சர் உதுமாலெப்பையினால் பொத்துவில் செங்காமம் மீள் குடியேற்றக் கிராமத்தில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
பழுளுல்லாஹ் பர்ஹான் பொத்துவில்: பொத்துவில் செங்காமம் மீள் குடியேற்றக் கிராமம் மற்றும் தென் ஆபிரிக்கா சுனாமி வீட்டுத்திட்டக் கிராமம், சர்வோதயக் கிராமம் ஆகிய பிரதேசங்களிளுள்ள மூவின மக்களும் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த
-
இலங்கையின் உயர் மட்ட வர்த்தக குழுவொன்றினை ரஷ்யாவுக்கு வருகைதருமாறு அழைப்பு!
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையின் உயர் மட்ட வர்த்தக குழுவொன்றினை ரஷ்யாவுக்கு வருகைத்தருமாறு இ்லங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் நிர்வாக துறைக்கான ஆலோஷகர் கொண்ஸ்டன்டின் சொஹசட்வோவ் இலங்கையின் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
-
முல்லைத்தீவு முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் ஹக்கீம் தலைமையில் ஆராய்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் முல்லைத்தீவு: முல்லைத்தீவு, கொத்தியாகும்பம் கிராம விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நடைபெற்ற காணிக்கச்சேரியில் தீர்மானிக்கப்பட்டபடி 77 பேருக்கு தலா அரை ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட காணிக்கு உறுதிப்பத்திரங்களை விரைவில் உரியவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்டச்செயலாளரும், பிரதேச செயலாளரும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மட்-பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயத்தில் 2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளையும், கற்பித்த அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு- பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் மட்-பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயத்தில் 2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளையும்,கற்பித்த அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா 20-05-2013 இன்று திங்கட்கிழமை
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அரசிலிருந்து வெளியேறாது
ஏறாவூர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இந்த அரசிலிருந்து வெளியேறாது. முஸ்லிம் காங்கிரஸை அரசிலிருந்து வெளியேற்ற யார் சதி செய்கிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் தக்க பாடத்தை முஸ்லிம் காங்கிரஸ் புகட்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை வைத்துள்ளது.
-
காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு
கொழும்பு: காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய கடற்படைக்குச் சொந்தமான படகில் இருந்து காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் நேற்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 04, பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து நேற்றுக்காலை கடற்படையினர் சடலத்தை மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.