Author: yourkattankudy.com
-
தேசிய மீலாத் விழா போட்டி 2013 பரிசளிப்பு விழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டி 2013 மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் அதில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு
-
தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ‘ரமழானை வரவேற்போம்’ எனும் தலைப்பிலான இஸ்லாமிய மாநாடு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கும் இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார அமைப்பான தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் ‘ரமழானை வரவேற்போம்’ எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் முன்பாகவுள்ள கடற்கரை முன்றலில் வல்ல அல்லாஹ்வின் உதவியால் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
-
அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தேசிய மட்டத்திற்கு தெரிவு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டியில் அல் குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
-
ஜனாஸா அறிவித்தல்
புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ். எம்.ஜ.எம்.றியாஸ் (ஆட்டோ சாரதி) (05.07.2013 வெள்ளிக்கிழமை) இரவு 10.00 மணியளவில் காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.
-
கொழும்பு கிராண்ட்பாஸிலும் பள்ளிவாசலுக்கு பிரச்சனை
கொழும்பு: இலங்கையில் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பழைய பள்ளிவாசலுக்குப் பதிலாக புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிவாசலை திறக்கவிடாது பௌத்த பிக்குகள் தலைமையிலானோர் இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக முறைப்பாடு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி பிரகடனம்
கொழும்பு: இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரகடனத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
-
“வன்னி மாவட்ட கல்விக்கு அமைச்சர் றிசாத் ஆற்றும் பணி பெறுமதியானது”: செயலாளர் றிப்கான் பதியுதீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா மாவட்டத்தில் சூடுவேந்த பிளவு மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இரு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனினால் இன்று நாட்டி வைக்கப்பட்டது.
-
மகன் குடித்துக் குழப்பம் செய்தது உறுதியானால் பதவி விலகத் தயார்: கெஹெலிய
கொழும்பு: தனது மகன் றமித் றம்புக்வெல்ல விமானத்தில் குடித்துவிட்டு குழப்பம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகன் அதிகமாகக் குடித்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சிரமதானம் மூலம் துப்பரவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேனும் பாரிய சிரமதானப் பணி இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ. றஷீத் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
-
பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் கல்முனையில் இடம் பெறவுள்ளது என்பது ஒரு வதந்தி – கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) கல்முனையில் இடம்பெறவுள்ளது என்பது ஒரு வதந்தி என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
-
வேறு குரூப் இரத்தம் ஏற்றியதால் இளம் பெண் பலி: வைத்தியர் மற்றும் தாதி உட்பட நால்வர் கைது! கைது!
– OiT பெங்களூர்: பெங்களூரில், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறுதலாக வேறு பிரிவு இரத்தத்தை ஏற்றியதால் பரிதாபமாக அவர் பலியானார். மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது ராஜேஸ்வரி, கடந்த 4 ஆண்டுகளாக இரத்தச் சோகையினால் பாதிக்கப் பட்டிருந்தார். இதனால், இவருக்கு அடிக்கடி இரத்தம் ஏற்றப்படுவது வழக்கம்.
-
மீலாத் போட்டியில் புனித சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலை மாணவி பாத்திமா பதீனா தேசிய மட்டத்திற்கு தெரிவு
– விசேட செய்தியாளர் மட்டக்களப்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டி 2013 அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலை தரம்-05 மாணவி செல்வி பழுளுல்லாஹ் பாத்திமா பதீனா மீண்டும் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.