-
அன்புள்ள அரசியல்வாதிகள் மற்றும் தனவந்தர்களுக்கு..
அஸ்ஸலாமு அலைக்கும் சங்கைமிக்க ரமழானின் இறுதிப் பத்தில் நாம் இருக்கிறோம். லைலத்துல் கத்ர் இரவை அடைகிறோமோ இல்லையோ பெருநாளை சந்தோசமாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆவலில் மக்கள் வெள்ளம் மெயின் வீதியிலும் தையல்காரர்களிடமும் தங்களை அர்ப்பணித்திருக்கிறது.
-
பெண்களுக்கு எதற்கு பெருநாள் பஸார்..?
– M-16 சமூகச் சீரழிவுகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நமது ஊருல் தற்பொழுது பெண்களுக்கான பெருநாள் பஸார் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சம்மேளனக் கூட்டத்திலும் அடி தடி, பள்ளிவாயல் தெரிவிலும் அடி தடி என்று தலைமைத்துவத்தின் நிலைமை வேற இப்படி இருக்கையில், பெருநாள் பஸார் பெண்களுக்குத் தேவையற்றதொன்றே.
-
முஸ்லிம் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு
எம்.எஸ்.எம்.ஸாகிர் கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு நாளை (30) புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு முஸ்லிம் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர். எம் மலீக் (நளீமி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்த இப்தார் நிகழ்வில், தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர். எம். எச். ஏ ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வு
– எம்.எஸ்.எம்.ஸாகிர் கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கொழும்பு – 07, இல: 117, விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இவ்விப்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
-
13 முறை ஐரோப்பாவின் சம்பியனாக முடிசூடியது ரியல் மெட்ரிட்
– MJ கீவ்: நேற்றிரவு யுக்ரைன் தலைநகர் கீவ் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற ஐரோப்பாக் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் லிவர்பூல் கழகத்தை 3:1 கோல் அடிப்படையில் வெற்றிபெற்று ஐரோப்பாவின் சம்பியனாக சாதனை படைத்திருக்கிறது ரியல் மெட்ரிட் கழகம். 2016, 2017 மற்றும் 2018 தொடர்ச்சியான ஹட்ரிக் வெற்றியையும் தனதாக்கி மற்றுமொரு சாதனையையும் படைத்திருக்கிறது ரியல் மெட்ரிட்.
-
நாளை இடம்பெறும் சம்பியன் லீக் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ள யுக்ரைன் மைதானத்தின் அழகுத் தோற்றம்
– MJ கீவ்: யுக்ரைனின் தலைநகர் கீவ், ஒலிம்பிக் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி நாளை மாலை 7:45 க்கு இடம்பெறும் ஐரோப்பா சம்பியன் கிண்ண இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் நாட்டின் ரியல் மெட்ரிட் கழகமும், இங்கிலாந்தின் லிவர்பூல் கழகமும் மோதவிருக்கின்றன. உலக கால்பந்தாட்ட இரசிகர்களால் அதிக ஆர்வமாக எதிர்பார்க்கப்படும் இப்போட்டி இடம்பெறும் கீவ் ஒலிம்பிக் மைதானம் 1923இல் அமைக்கப்பட்டது.
-
காத்தான்குடிக்குள் நுழைந்தவர்கள் யார்?
– AK-77 காத்தான்குடி: நேற்று (24) காத்தான்குடிக்குள் ஆட்டோ ஒன்றினுள் வந்த நபர்கள் யார் என்பது பற்றிய ஓர் சலசலப்பு காத்தான்குடியில் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது கிறீஸ் மனதன் எனும் மர்ம நபர்களும் ஊருக்குள் ஊடுறுவி இருந்ததும் இவ்வாறான நோன்பு காலமே.
-
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி: இந்தியா, ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி, 17 வயது பள்ளி மாணவியையும் சுட்டு கொன்றுள்ளது காவல்துறை. கார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.
-
நிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு
கொழும்பு: கடந்த சில தினங்களாக பெய்த மழை இன்று சற்று குறைந்திருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என இன்று மாலை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. 17 மாவட்டங்களில் இந்த சீரற்ற காலநிலை நிலவுகிறது. மழை வெள்ளத்தினால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. இவற்றில் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
-
ரஷ்யாவைத் தொட்டுப்பார்க்க அமெரிக்கா அஞ்சுவது ஏன்?
மொஸ்கோ: சோவியத் யூனியனின் பிரமான்டமான ரெட் ஆமி (Red Army), சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் பேர்லின் கோட்டையை முற்றுகையிட்டு, இரண்டாம் உலக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது முதல், சோவியத் யூனியனுக்கு என்று ஓர் தனிப்பெருமை உலகில் இருந்தது. அமெரிக்காவுக்கு சவாலாக இராணுவ விடயங்களில் முன்னேறிவந்த சோவியத் யூனியனை துண்டந் துண்டுகளாக உடைத்துவிட்டால் காலமெல்லாம் நாங்கதான் இந்த உலகத்துக்கே சண்டியன் என்ற நப்பாசையில் அமெரிக்கா சோவியத் யூனியனில் கைவைத்தது.
-
இலங்கை வந்த பிரித்தானிய ரக்பி வீரர்கள் இருவர் மரணம்
கொழும்பு: கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த பிரிட்டனைச் சேர்ந்த மற்றுமொரு ரக்பீ வீரரும் உயிரிழந்ததாக பொலிசார் உறுதிப்படுத்தினர். நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த வியாழக்கிழமை (மே 10) ‘Clems Pirates Rugby’ அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் இரண்டு வீரர்கள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
-
பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் அல்குர்ஆன் சம்பியன் விருதுக்கு விண்ணப்பம் கோரல்
அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை நகரில் இயங்கி வருகின்ற பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டும் புனித ரமழான் மாதத்தை கண்ணியப்படுத்தியும் “அல்குர்ஆன் சம்பியன் விருது” வழங்கும் போட்டியொன்றை நடாத்த அப்பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.