Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி ‘அமானா கிட்ஸ் கொலிஜ்’ பாலர் பாடசாலை மாணவர்களின் கல்விச் சுற்றுலா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அமானா கிட்ஸ் கொலிஜ் பாலர் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் அண்மையில் மட்டக்களப்புக்கு கல்விச் சுற்றுலா ஒன்றிளை மேற்கொண்டிருந்தனர்.

  • மட்டு-மாவட்ட தமிழ்,சிங்கள,முஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபரங்களை நூல் வடிவில் வெளியிட விபரம் திறட்டும் – மட்டு -மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டதனை அடுத்து தாயகத்தின் அபிவிருத்தியிலும் இனம்சார் பன்மைத்துவம்,சமய இன மற்றும் சமூக பிரச்சினைகளை கையாளுதல்,பிரச்சினைகளுக்கான அகிம்சை வழித்தீர்வு, சமய வித்தியாசங்களை மதித்தல், இன ரீதியான வித்தியாசங்களுக்கு ஏற்புடைமை அளித்தல் போன்ற உயர் எண்னங்களை கருத்திற் கொண்டு எமது அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தை அதன் சேவை எல்லையின் பரப்பாக கொண்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.

  • சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

    – ரைஸ் கிண்ணியா: 2013 ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட கிண்ணியா இடிமன் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று மாலை இடிமன் நூறுள்ளஹ் ஜூம்ஆப் பள்ளியில் இடம்பெற்ற நிகழ்வின் போது பாரட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

  • புவி ரஹ்மதுல்லாஹ் பகிரங்க மன்னிப்புக் கோரினார்

    காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை அவாகளிடம், ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி எம்.ஐ. றஹ்மத்துழ்ழாஹ் இன்று (21.05.2014) மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

  • நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமரின் பெயரை குறிப்பிடுவது தவறு

    கொழும்பு: அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமரின் பெயரையோ, எம்.பிக்களின் பெயரையோ, எமது நட்பு நாடுகளின் பெயரையோ குறிப்பிடுவது தவறு என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. ஆகியோர் நேற்று சபையில் சுட்டிக்காட்டினர்.

  • ‘மாயமான மலேசிய விமானம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது’: மஹதிர் முகம்மத்

    – S-90 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எங்கோ உள்ளது. ஆனால் அது குறித்த தகவலை சி.ஐ.ஏ மற்றும் போயிங் நிறுவனம் மறைக்கிறது என்று முன்னாள் மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மத் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH. 370 மாயமானது.

  • மனிதப் பாவனைக்குதவாத பொருட்கள் காத்தான்குடியில் பறிமுதல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் 20-05-2014 இன்று செவ்வாய்கிழமை காலை முதல் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வர்த்தக நிலையமொன்றிலிருந்து 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் றபீக் தெரிவித்தார்.

  • காத்தான்குடி பிரதேச செயலக நடமாடும் சேவை – 22-05-2014

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் கீழ் கிராம சேவகர் பிரிவு தோறும் நடாத்தப்படும் நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளுக்கான நடமாடும் சேவைகள் 22-05-2014 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெறும்.

  • அமெரிக்க தீவிரவாத வழக்கில் அபு ஹம்சா குற்றவாளி – 100 ஆண்டு சிறைத் தண்டனை

    – S-90 நியுயோர்க்: அமெரிக்கச் சிறையில் உள்ள அபு ஹம்சா என்ற கைதி, பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள், சதித் திட்டம் உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளி என்று கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.

  • கேன்ஸ் விழாவில் ஈரான் நடிகையின் முத்தம்: ஆத்திரத்தில் ஈரான்

    – S-90 பரீஸ்: கேன்ஸ் திரைப்பட விழா தலைவர் ஜில்லஸ் ஜேக்கப்பின் கன்னத்தில் முத்தமிட்ட ஈரானிய நடிகை லைலா ஹதாமி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இந்த திரைப்பட விழா நடுவர்களில் ஒருவராக ஈரானிய நடிகை லைலா ஹதாமி உள்ளார்.5 பெண் நடுவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

  • இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் உஷாளினி! பெற்றோர் அடையாளம் கண்டனர்

    யாழ்ப்பாணம்: இறுதிப் போரின் போது இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு, அதற்கான ஆதாரமாக அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி அவரது பெற்றோரினால் நேற்று அடையாளம் காணப்பட்டார்.

  • திருமலை-மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற வான் விபத்தில் அரச சேவைகள் தாதிமார் சங்கத்தின் கிழக்கு அமைப்பாளர் உட்பட நால்வர் படுகாயம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: திருகோணாமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் 19-05-2014 நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வான் விபத்தில் அரச சேவைகள் தாதிமார் சங்கத்தின் கிழக்கு மாகாண அமைப்பாளர் நாகலிங்கம் சதிதரன் உட்பட நால்வர் படுகாயமைடைந்துள்ளனர்.

←Previous Page
1 … 755 756 757 758 759 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar