Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கொக்கட்டிச்சோலையில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் எதிர்வரும் 26-05-2014 திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின் தெரிவித்தார்.

  • அடிப்படை உரிமை கோரியதற்காகவா அரசியல் பழிவாங்கல்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் கேள்வி

    – PMGGஊடகப்பிரிவு மன்னார்: ‘தமது இருப்பிடங்கள் தொடர்பில் அடிப்படை உரிமை கோரியதற்காகவா அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?’ என மன்னார்-மறிச்சிக்கட்டி, மரைக்கார் தீவு மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் முன்னின்று செயற்பட்டுவரும் மௌலவி தௌபீக் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்ற உத்தரவு தொடர்பில் இன்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி) அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண் பலி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரழிந்த சம்பவம் (19) நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு பழுகாமம் வீரன்சேனை கிராமத்தில் இடம்பெற்றதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

  • மாணவர்களுக்கு மூலிகைக் கஞ்சி வழங்கும் திட்டம்

    கொழும்பு: மாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக் கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படு த்தவுள்ளது. இதனடிப்படையில் நாளாந்தம் மாணவர் களுக்கு ஒரு கோப்பை மூலிகைக் கஞ்சி வழங்கப்படும்.

  • ஜனாதிபதி சீனா பயணம்

    கொழும்பு: சீனாவில் நடைபெறும் சர்வதேச மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றிரவு சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். ஆசியாவின் செயற்பாடுகளில் நம்பிக்கையையும் தொடர்பாடலையும் கட்டியெழுப்புவதற்கான அமைப்பு (சி.ஐ.சி. ஏ) ஏற்பாடு செய்துள்ள அதன் நான்காவது மாநாடு இன்று 20ம் திகதி காலை ஆரம்பமாவதுடன் 22ம் திகதி வரை தொடர்ந்து மூன்று தினங்களுக்கு மாநாட்டின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

  • பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு இலங்கை முன்னாள் வீரர் ஹதுருசிங்க பயிற்சியாளராகத் தெரிவு

    டாக்கா: பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு இலங்கையைச் சேர்ந்த சந்திக்க ஹதுருசிங்க பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்துறை ஆட்டக்காரரான அவர் இலங்கை அணியின் சார்பில் 26 டெஸ்ட் போட்டிகளிலும், 35 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

  • நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பதுளை கள நகர்வு

    – PMGG ஊடகப்பிரிவு, பழுலுல்லாஹ் பர்ஹான் பதுளை: விரைவில் நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அதன் 2 ஆவது கட்ட களப் பயணத்தினை கடந்த 18.05.2017  ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது.

  • ‘இலங்கையுடன் வலுவான நல்லுறவு’: மோடி

    – S-90 டெல்லி: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான உறவுகளை தாம் எதிர்பார்ப்பதாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில், நரேந்திரமோடியுடன் தான் நேற்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தது குறித்தும் அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

  • முந்திரிகைத் தோட்டம் பார்த்திரூக்கிறீங்களா….?

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 500 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் கே.சசிகரன் தெரிவித்தார்.

  • இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர் நாளை லண்டனில் ஆரம்பம்

    – MJ லண்டன்: இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கை கிரிக்கட் அணி, நாளை செவ்வாய்க்கிழமை தனது புதிய இருபது20 அணியுடன் இங்கிலாந்து இளம் அணியை சந்திக்க இருக்கின்றது.

  • ‘கத்திச் சண்டை போடுவதா அல்லது அமைதியாக போவதா? முடிவு மோடி கையில்’: பாகிஸ்தான்

    – SHM லாஹூர்: கடந்த காலத்தை நாம் நிச்சயம் மறக்க முடியாதுதான். இருப்பினும் நாம் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு நல்லுறவுடன் திகழ முன்வர வேண்டும். அமைதியுடன் வாழ முயற்சிப்பதா அல்லது தொடர்ந்து கத்திச் சண்டை போடுவதா என்பதை புதிய இந்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்.

  • ‘மலேசிய விமானம் அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சியின் போது சுட்டு வீழ்த்தப்பட்டது’

    – S-90 லண்டன்: மாயமான மலேசிய விமானம் அமெரிக்க ராணுவ பயிற்சியின்போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.

←Previous Page
1 … 756 757 758 759 760 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar