காத்தான்குடி: காத்தான்குடி அமானா கிட்ஸ் கொலிஜ் பாலர் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் அண்மையில் மட்டக்களப்புக்கு கல்விச் சுற்றுலா ஒன்றிளை மேற்கொண்டிருந்தனர்.
கல்விச் சுற்றுலாவை மேற்கொண்ட அவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த பழைய கல்லடிப் பாலத்தை பார்வையிட்டதோடு மட்டுமன்றி மட்டக்களப்பு புகையிரத நிலையம் ,மட்டக்களப்பு மாநகர சபையின் நகர சிறுவர் பூங்கா,கல்லடி கடற்கரை உட்பட மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டனர்.
இதன் போது அமானா கிட்ஸ் கொலிஜ் பாலர் பாடசாலை மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவை தமது நண்பர்களுடன் சிநேக பூர்வமான முறையில் கழித்தனர்.
இதில் அமானா கிட்ஸ் கொலேஜ் பணிப்பாளர் அன்வர் உட்பட அமானா கிட்ஸ் கொலேஜ் அதிபர் ,ஆசிரியர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment