-
அரசாங்கத்தின் எதிர்ப்பால் அமெரிக்க நிகழ்ச்சித் திட்டம் ரத்து!
நியுயோர்க்: இலங்கையில் வாக்காளர்களை தெளிவுபடுத்தும் பொருட்டு அமெரிக்காவின் யூஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் நடத்தவிருந்த நிகழ்ச்சித் திட்டம், அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.
-
‘சுவனத்துப்பாதையை அடைந்து கொள்ளும் வழிமுறைகள்’ ஜூம்மா பயான் (ஓடியோ)
– ஒலிப்பதிவு:பழுலுல்லாஹ் பர்ஹான் தலைப்பு- சுவனத்துப்பாதையை அடைந்து கொள்ளும் வழிமுறைகள். உரை- அஷ்ஷெய்க் எம்.சி.எம்.அஸ்ஹர் (மின்ஹாஜி) இடம்-புதிய காத்தான்குடி, தாருல் அதர் அத்அவிய்யா அமைப்பின் ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயல்.
-
காலி போப்பே பொத்தல மரசெதுக்கல் கிராமம் ஜனாதிபதியினால் வைபவரீதியாக அங்குரார்ப்பணம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலி போப்பே பொத்தல மரசெதுக்கல் கிராமம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
-
12 வருடங்களுக்குப் பின் பிரேசில் அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவு: பிரேசில் ‘போர்க்கள’த்தில் ஜேர்மனியைச் சந்திக்கிறது!
– MJ றியோ: சற்று முன்னர் இறுதிவரை பலத்த சவால்களுக்கு மத்தியில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றின் இரண்டாவது போட்டியில் பிரேசில் கொலம்பியாவை 2:1 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கின்றது.
-
‘பித்அத்’ (வழிகேடு) இல்லாமல் றமழானை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் ” விஷேட பயான் நிகழ்ச்சி ஓடியோ
– ஒலிப்பதிவு:பழுலுல்லாஹ் பர்ஹான் தலைப்பு- ‘பித்அத் (வழிகேடு) இல்லாமல் றமழானை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் ” உரை-மௌலவி யூ.எல்.எச்.எம்.மக்கி (ஷர்கி) இடம்-ஒள்ளிக்குளம் மஸ்ஜிதுல் ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல்.
-
பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் 250 பேருக்கான விஷேட இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் டுபாய் நாட்டின் தாருல் பிர் இஸ்லாமிய நிறுவனத்தின் அனுசரனையில் 250 பேருக்கான விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 04-07-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் மஸ்ஜிதுல் அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
இஸிஸால் கவரப்படும் இலங்கை முஸ்லிம் இளைஞர்களும், அவதானங்களும்…
– ஏ. அப்துல் ஹமீட் கொழும்பு: ஹிலாபத் ஆட்சியை நிலை நிறுத்துவதாகக்கூறி தற்பொழுது கறுப்புக்கொடியுடன் ஈராக்கிலும், சிரியாவிலும் போராடிவரும் இஸிஸ் அமைப்பில் இலங்கையில் முஸ்லிம் இளைஞர்கள் கவரப்பட்டு வருகின்றனர்.
-
ஞானசாரவின் மற்றுமொரு திட்டம் அம்பலம்!
லண்டன்: தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும் ஞானசார தேரருக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தையை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஏற்பாடு செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இரகசியமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மீனபிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
-
யாழ் பொலிஸார் எவ்வித பதிவு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு
– PMGG ஊடகப்பிரிவு யாழ்ப்பாணம்: யாழ் நகரிலும், முஸ்லிம் பிரதேசங்களிலும் காணப்படுகின்ற முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பொலிஸ் புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திய இருவர் பதிவுகளை மேற்கொண்டுள்ளார்கள் இதுகுறித்து விளக்கமளிக்குமாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு விளக்கம்கோரி கடிதமொன்றினை அனுப்பியிருந்தார்.
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான 2014 வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான 2014 வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு எதிர்வரும் 06-07-2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.45 மணிக்கு காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
-
ஆஸ்பத்திரிகளில் அனுமதியாவோருக்கு அடையாள அட்டைகள் கட்டாயம்
கொழும்பு: இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் நம்முடைய அரச ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெற்று இலவசமாக பெரிய சத்திரசிகிச்சைகளைக் கூட முடித்துச் செல்கின்றனர். இலவச சுகாதார சேவை இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டுமே உள்ளது.
-
எம்.பிக்கள் தொகையில் மாற்றம்
கொழும்பு: மாகாண சபை தேர்தல் சட்டத்தின்படி இடப்பரப்பு மற்றும் சனத்தொகைக்கேற்ற, உறுப்பினர் தெரிவுக்கமைய ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொன ராகலை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக் கையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.