Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி: நான்கு அணிகளின் கடந்தகால அரையிறுதிச் சுற்று வரலாறுகள்

    – MJ றியோ: உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப்போட்டிகளை நிறைவுக்குக் கொண்டுவரும் அரையிறுப்போட்டிகளின் முதலாவது போட்டி, இன்று இரவு இடம்பெற இருக்கின்றன. இவ் அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி இருக்கும் 4 அணிகளது கடந்தகால உலகக் கிண்ண அரையிறுதி வரலாறுகள் பின்வரும் படங்களில் விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

  • ‘பிளக் டிக்கட்’ சரச்சையில் நெய்மரின் தந்தை…

    – SHM பிரேசிலியா: உலக கோப்பை கால்பந்தாட்ட ‘பிளக் டிக்கெட்’ சந்தையில் பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மரின் தந்தைக்கு தொடர்புள்ளதாக அந்த நாட்டு பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. கால்பந்து போட்டித்தொடரில் இருந்து காயம் காரணமாக நெய்மர் விலகியுள்ள நிலையில், பிரேசில் ரசிகர்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

  • அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோர வந்த 41 பேர் படகில் வைத்தே மட்டக்களப்புக் கடலுக்கு அப்பால் இலங்கையிடம் ஒப்படைப்பு!

    மெல்போர்ன்: இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குத் தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 41 பேர்களை நடுக்கடலில் மறித்து, பின்னர் அவர்களை இலங்கை அதிகாரிகளிடம் நடுக்கடலிலேயே ஒப்படைத்துவிட்டதாக அவுஸ்திரேலியா ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்படைப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக அது கூறியது.

  • லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யாவின் இப்தார் நிகழ்வு

    – எம்.எச்.எம்.அன்வர் காத்தன்குடி: புதிய காத்தன்குடி ஏ.எச்.எம். பௌசி மாவத்தையில் இயங்கிவரும் ‘லஜ்னத்துஸ்ஸூன்னா அந்நபவிய்யா’ பெண்கள் அரபிக்கல்லூரியின் ஏற்பாட்டில்  இப்தார் நிகழ்வு நேற்று அதன் வளாகத்தில் இடம்பெற்றது. பயான் நிகழ்வு அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.சி.எம். ஜெய்னுலாப்தீன் (மதனி) யினால் நிகழ்த்தப்பட்டதுடன் அரபிக்கல்லூரி தொடர்பாகவும் விளக்கமளித்தார்.இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

  • குவைத்தில் ரமழானில் இடம்பெற்றுவரும் ‘குர்ஆனை புரிந்து கொள்ளுங்கள்’- குர்ஆன் வகுப்பு

    – K-TIC குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC) ஏற்பாடு செய்திருக்கும் புனித ரமழான் மாத சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சங்கத்தின் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இஃப்தாருக்கு பிறகு இஷா வரை இடம்பெற்று வருகிறது.

  • காத்தான்குடியில் மாபெரும் இலவச E.N.T. வைத்திய முகாம்

    – SLyouths காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை (10.07.2014) அன்று காலை 8.00 மணி முதல் பி.ப. 03.00 மணி வரை காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் இலவச  E.N.T.  (கண், மூக்கு, தொண்டை சிகிச்சை) வைத்திய முகாம் கனடா நாட்டு விஷேட வைத்திய நிபுணர்களினால் நடைபெறவுள்ளது.

  • ‘அமைச்சரினதும் ஆளுநரினதும் சிந்தனைக்கமைவாக சாகசப் பூங்கா அமையப் பெற்றுள்ளது’ – யாழ்.மாநகர முதல்வர்

    – FM. பர்ஹான் யாழ்: சிறுவர்களது பொழுதுபோக்கு மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பழைய பூங்காவின் சாகசப் பூங்காவை அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் பாதுகாத்து பராமரிக்க வேண்டுமென யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

  • யார் இந்த இஸிஸ்? யார் இந்த அபூபக்ர் பக்தாதி??

    – MJ லண்டன்: தற்பொழுது உலகெங்கிலிலும் பேசப்பட்டுவரும்  பெயர்கள் இரண்டு. ஒன்று இஸிஸ் என்ற போராட்ட அமைப்பு. மற்றையது அதன் தலைவர் அல்லது ஹலீபா என அழைக்கப்படும் அபுபக்ர் அல் பக்தாதி ஆகும்.

  • ‘ஈராக்கிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை’

    கொழும்பு: ஈராக்கிலுள்ள சுமார் 1000 இலங்கையருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லையெனவும் பக்தாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இன்னமும் செயற்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

  • 139 மில்லியன் ரூபா வருமானவரி நிலுவையில்!!

    கொழும்பு: நாற்பதாயிரத்துக்கும் அதிகமான தனியார் நிறுவனங்களும் தனி நபர்களும் சுமார் 139 பில்லியன் ரூபா வருமான வரி செலுத்தவில்லையென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமான வரிகளைச் செலுத்தத் தவறுபவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் பி.எல்.எஸ்.லியனகே தெரிவித்துள்ளார்.

  • குருக்கள்மடத்தில் முஸ்லிம்கள் காணாமல் போனமை குறித்து விசாரணை

    காத்தான்குடி: 1990ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் பகுதியில் கடத்தப்பட்டுக் காணாமல் போனதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் உறவினர்களிடமிருந்து பொலிஸாரால் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

  • ‘தாதிகளை விடுதலை செய்ய ஈராக் அரசாங்கம் உதவவில்லை: சதாமின் நண்பர்களே உதவினர்’!

    – SHM டெல்லி: ஈராக்கில் இஸிஸ் போராளிகளின் பிடியில் சிக்கித் தவித்த இந்திய தாதிகளையும், இதர இந்தியர்களையும் மீட்பதில் ஈராக் அரசும், ஈராக் ராணுவமும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதையடு படு புத்திசாலித்தனமாக மறைந்த சதாம் ஹூஸைனின் பாத் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களிடமும், போராளிகளுக்கு நெருக்கமானவர்களிடமும் இந்திய அரசே நேரடியாக தொடர்பு கொண்டு பேசி காரியத்தைச் சாதித்து அசத்தியுள்ளது.

←Previous Page
1 … 715 716 717 718 719 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar