-
‘ஊவா முஸ்லிம்களின் வாக்கு ஐ.ம.சு.முவுக்கே’- அஸ்வர் எம்.பி.
கொழும்பு: நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் அம்மாகாணத்தில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே தமது வாக்குகளை வழங்குவர் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கூறினார்.
-
உலமாக்களுக்கான செயலமர்வு
ஏறாவூர்: ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான செயலமர்வு ஏறாவூர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நிறுவனத்தின் இணைப்பாளர் ஜனாப். எஸ்.ஏ.சி.நஜிமுதின் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
-
‘புத்தளம் நகரத்தின் அபிவிருத்தியின் மூலம் எமது வர்த்தக சமூகம் நன்மைய அடையும் எனற இலக்கினை மையப்படுத்தியே எனது பணிகள் இடம் பெறுகின்றன’
– கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா டோஹா: புத்தளம் நகரத்தின் அபிவிருத்தியின் மூலம் எமது வர்த்தக சமூகம் நன்மைய அடையும் எனற இலக்கினை மையப்படுத்தியே எனது பணிகள் இடம் பெறுவதாக தெரிவித்துள்ள புத்தளம் நகர சபை தலைவர் கமறுதீன் அப்துல் பாயிஸ் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்ற போது அரச சட்டதிட்டங்களுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
-
காங்கேயனோடையில் மனித நேயம் பேணும் முதலாவது இரத்ததான நிகழ்வு
– மீஸான் ஸ்ரீலங்கா காங்கேயனோடை: காங்கேயனோடை மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையில் மனித நேயம் பேணும் இரத்ததான நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 31.08.2014ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிக்கு காங்கேயனோடை அல் அக்ஷா மஹா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
-
மதியன்பனின் ”ஆனாலும் திமிருதான் அவளுக்கு” கவிதை நுால் வெளியீட்டு விழா
-டீன்பைரூஸ், எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மதியன்பன் மஜீதின் ”ஆனாலும் திமிருதான் அவளுக்கு” கவிதை நுால் வெளியீட்டு விழா (29.008.2014 வெள்ளிக்கிழமை) காத்தான்குடி அல் மனார் அறிவியல் கல்லுாரியின் அர்ராஷீத் கேட்போா் கூடத்தில் பன்னுாலாசிரியா், கலாபுசணம் அல்ஹாஜ் எம்.எம்.எம்.மஹ்றுாப் கரீம் MA அவா்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக BCAS நிறவனத்தின் பணிப்பாளரும்,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ். MM அப்துர் ரஹ்மான் Bsc, அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
-
நீர் நிறைத்து வைக்கப்பட்டிருந்த வாளியில் தலை கீழாக விழுந்து குழந்தை பலி ஏறாவூர் – ஐயங்கேனியில் சம்பவம்
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேனி தமிழ் பிரிவில் இன்று மாலை திருமால் பவித்திரன் என்ற பதினெட்டு மாத ஆண் குழந்தை இதனது வீட்டு குளியலறையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ரக வாளியினுள் தலை கீழாக விழுந்து மூச்சுத்திணறி மரணமாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
-
அல்மனாரின் குர்ஆன் மனனப்போட்டிக்கான விண்ணப்பம்
– அல் மனார், காத்தான்குடி
-
கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவுக்கு பிரதியமைச்சர் புஞ்சிநிலமே வருகை
– ரைஸ் கிண்ணியா: இம்மாதம் 9 ஆம் திகதி வெகுவிமர்சையாகவும் மிக கோலாகலமாகவம் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவினை பார்வையிட பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று வருகை தந்திருந்தார்.
-
148வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி -ஆற்றங்கரைப் பகுதி மனித நேயம் பேணும் பாரிய சிரமதாணம் மூலம் துப்பரவு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 148வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இயங்கும் 164சி பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதி மனித நேயம் பேணும் பாரிய சிரமதாணம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. குறித்த மனித நேயம் பேணும் பாரிய சிரமதாண நிகழ்வு இன்று (29-08-2014) வெள்ளிக்கிழமை காத்தான்குடி-04 குபா பள்ளிவாயலுக்கு அருகாமையிலுள்ள ஆற்றங்கரைப் பகுதியில் இடம்பெற்றது.
-
பொது பல சேனாவும் அமைச்சர் றிசாத் பதியுதீனும்
கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்துக்களை பகிரங்கமாக கூறிவரும் பொது பல சேனா இன்னும் அதனது பாதையில் இருந்து விலகியதாக தெரியவில்லை.காலத்திற்கு ஏற்ற விடயங்களை இனம் கண்டு அதனை வைத்து இலங்கையில் வாழும் பௌத்த மக்களையும் இஏனையச சமூகத்தினரையும் முஸ்லிம்களுக்கு எதிராக துாண்டி அதன் மூலம் வெளிநாட்டு நிதியினை பெற்றுகொள்ளும் இந்த அமைப்பு மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏற ஆரம்பித்திருக்கின்ற கதையாக மாறிவருகின்றது.
-
இஸ்லாமிய வரலாற்றில் வழிகெட்ட இயக்கங்கள் தோன்றுவதற்கான காரணங்கள்
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு பனார்: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் (29-08-2014) ‘இஸ்லாமிய வரலாற்றில் வழிகெட்ட இயக்கங்கள் தோன்றுவதற்கான காரணங்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும்.