காங்கேயனோடையில் மனித நேயம் பேணும் முதலாவது இரத்ததான நிகழ்வு

Blood donation– மீஸான் ஸ்ரீலங்கா

காங்கேயனோடை: காங்கேயனோடை மீஸான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையில் மனித நேயம் பேணும் இரத்ததான நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 31.08.2014ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிக்கு காங்கேயனோடை அல் அக்ஷா மஹா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு 18 வயதுக்கு மேற்பட்ட, 55 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க முடியும், இங்கு பெண்களுக்கான விஷேட ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காங்கேயனோடைக் கிராமத்தில் நடைபெறும் முதலாவது இரத்ததான நிகழ்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Blood donation

Published by

Leave a comment