-
அமெரிக்காவும், இஸ்ரேலும், இஸ்லாமிய தேசமும்….
– MJ லண்டன்: இப்போது உலகம் காஸாவை மறந்துவிட்டது. உலக முஸ்லிம்களும் காஸாவை மறந்து தனது சொந்த விடயங்களில் மீண்டும் கவனம் செலுத்திவரும் இந்நிலையில் உலக ஜாம்பவான் என மார்பு தட்டும் அமெரிக்காவின் இராணுவ விளையாட்டை கொஞ்சம் அலசிப்பார்ப்போம்.
-
மீள் குடியேற்றம் மற்றும் விவசாய பயிர்ச் செய்கையில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஆராயும் கூட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: புணானை மேற்கு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்ற விடயங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் கடந்த 15-09-2014 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
-
ஊவா தேர்தலில் முஸ்லிம் கூட்டணி: சுமந்து வரும் அபாயங்கள்
NFGG ஊடகப்பிரிவு பதுளை: ஊவா தேர்தலில் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் கூட்டணியொன்று தனித்தரப்பாக களம் இறங்கியுள்ளது. இந்தக் கூட்டணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் தலைமை தாங்குகின்றன. மேலோட்டமாக பார்க்கின்றபோது இக் கூட்டணி பதுளை மாவட்ட முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படுத்துகின்ற ஒரு நல்ல விடயம் போன்று தோன்றினாலும் இது பதுளை மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பல அபாயகரமான விளைவுகளை கொண்டிருக்கிறது. இதுபற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியது நமது கடமையாகும்.
-
‘தமிழ் மக்கள் மனங்களில் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே’ – பஷீர் சேகுதாவூத்
ஏறாவூர்: பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 14 ஆவது வருட சிரார்த்த தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
பாத்திமா சீமாவுக்கு பிரார்த்தனை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் அண்மையில் காம வெறியன் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்று பிரிந்த பாடசாலை மாணவி மர்ஹூமா மு.ச. பாத்திமா சீமா எனும்
-
சீன ஜனாதிபதியின் வருகையையிட்டு மின் கட்டணம், மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு!!!
கொழும்பு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்றுமுதல் அமுலுக்குவரும் பொருட்டு மின்கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.
-
புதிய காத்தான்குடி அபிவிருத்திக் குழு உதயம்……
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:பிரதியமைச்சர் MLAM.ஹிஸ்புல்லா MA/MP இனால் பதிய காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட இருக்கும் எதிர்கால அபிவிருத்தியின் நிமித்தம் பதிய காத்தான்குடி அபிவிருத்திக் குழு உதயம் பெற்றுள்ளது. அதன் தலைவராக காத்தான்குடி நகர சபை கௌரவ உறுப்பினர் அல்ஹாஜ் HMMபாக்கீர் BA/JP தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
சீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு
கொழும்பு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தமது பாரியாருடன் இன்று காலை 11.45 மணிக்கு B 2472 எயார் சைனா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு மகத்தான செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
-
பாகிஸ்தான் இருபது20 அணியின் தலைவராக அப்ரிடி மீண்டும் தெரிவு
– MJ லாஹூர்: பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரரும், நம்பிக்கை நட்சத்திரமுமான சஹீட் அப்ரிடி, இருபது20 அணிக்கு மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எதிரவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது20 போட்டியில் இருந்து, இந்தியாவில் இடம்பெறும் 2016 உலக இருபது தொடர்வரை அணித்தலைவராக இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்திருக்கிறது.
-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேசத்திற்கான முதலாவது கட்டார் கிளை
– கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா டோஹா: இலங்கை அரசியலில் புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கும் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக கடல் கடந்து வாழும் இலங்கை மக்களினை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரும் பணியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது.
-
உங்கள் பயணம் இனிதே முடிந்தது !
பிரகாசக்கவி எங்கிருந்து வந்தீர்களோ அங்கே மீண்டு விட்டீர்கள் … அரசியலில் யானையாய் நீங்கள் இருந்த போதெல்லாம் பாகனும் நீங்களாகவே இருந்தீர்கள் …
-
சீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்து
கொழும்பு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (16) இலங்கை வருகிறார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார்.