-
பதுளை பள்ளிவாயலுக்கு அமைச்சர் ரிசாத் விரைவு: பொலிசாருக்கு கடும் கண்டனம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா பதுளை: பதுளை பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடன் ஸ்தலத்துக்கு விரைந்து சம்பந்த பட்டவர்களை கைது செய்வதிலும் துரித கவனம் செலுத்தினார்.
-
பாலமுனையில் இரத்ததான முகாம்
(பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தை ‘கிளிக்’ செய்யவும்)
-
திருமணவாழ்க்கை சம்மந்தமான இரணடு நாள் கருத்தரங்கு
– டீன்பைரூஸ் காத்தான்குடி: ஆயுா்வேத,யுனானி,மனநிலை சிகிச்சை ” மினா ஹேர்பல் ஹவுஸ் ” நிலையத்தின் ஏற்பாட்டினில் திருமணவாழ்க்கை சம்மந்தமான இரணடு நாள் கருத்தரங்கு அண்மையில் திருமணம் நடந்த அல்லது நடக்க இருக்கின்ற தம்பதிகளுக்கே முக்கியமாக இக்கருத்தரங்கு நடைபெற இருக்கன்றது.
-
105 தமிழ் முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு இலவசமாக கிணறுகள் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் வாழும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் இலவசமாக கிணறுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
-
‘இஸிஸ் போராளிகளை அழிக்க தரைப்படை செல்லாது’ – ஒபாமா
– AF-90 வாஷிங்டன்: ஈராக்கிலும், சிரியாவிலும் நிலைகொண்டுள்ள இஸிஸ் போராளிகளை ஒடுக்க அமெரிக்க தரைப்படை அனுப்பப்படமாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஒருவர் இரு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், அமெரிக்க தரைப்படையை ஈராக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு நான் சிபாரிசு செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.
-
ஸ்கொட்லாந்து வாக்கெடுப்பு தொடங்கியது
எடின்பரோ: ஸ்கொட்லாந்து சுதந்திரத்துக்கான கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை நடந்து வருகிறது. நீண்ட வரிசைகளில் மக்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகிறார்கள்.
-
“சபிக்கப்பட்டவர்கள் ” என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 18-09-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
அமைச்சர் பஷீர் சேகு தாவூத் அவர்களின் அண்மைய உரைகளும் எமது அவதானங்களும்
– ILM. றிபாஸ் காதுகளே இவன் கரங்களுக்கு கட்டளை இடுவதால் வார்த்தை ஜாலங்களுக்குள் வாக்கை தொலைப்பவன் மூளையை இவன் மூடியே வைப்பதால் மூடர்களால்கூட இவனுக்கு தலைவனாயிருக்க முடிகிறது.
-
நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி;மூத்த முஸ்லிம் அரசியில் தலைமையும் 25 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்துவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 50தாவது அகவையை ஒட்டி 50 கவிஞர்கள் இணைந்து இக்கவிதை தொகுதியை வெளியீடு செய்துள்ளனர்.
-
காத்தான்குடி கடற்கரையில் ஹெப்பி லேன்ட்……..
-டீன் பைரூஸ்- காத்தான்குடி: சிறுவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு சிறுவர்களுக்கான நிரந்தர சிறுவர் புங்கா ஒன்றினை ஹெப்பி லேன்ட் என்ற பெயரில் அதன் நிர்வாகத்தினர் காத்தான்குடி கடற்கரை (அன்வர் பள்ளிவாயல்) அருகாமையில் பாரிய செலவில் அமைத்து வருகின்றனர்.
-
‘கைக்குண்டோ, பட்டாசோ விசாரணை அவசியம்’- அஸ்வர் எம்.பி
தம்புள்ள: தம்புள்ள பள்ளிவாசலுக்குள் வீசப்பட்டது கைக்குண்டோ, பட்டாசோ இது குறித்து பூரண விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என ஊடக மேற்பார்வை எம்.பி. அஸ்வர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
-
காத்தான்குடி அல் மனார் ஏற்பாட்டில் புனித அல்குர்ஆன் மனனப் போட்டி….
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று 17.ம் திகதி தொடக்கம் மூன்று நாட்களுக்கு இடம் பெறவுள்ள புனித அல்குர்ஆன் மனனப் போட்டியில் பெருமளவிலான ஹாபிழ்கள் கலந்து கொண்டனர் அல்மனார் நிறுவன அர்ராஷிக் மண்டபத்தில் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ எல் எம் மும்தாஸ் மதனி தலைமையில் இடம்பெற்றது.