-
பாத்திமா சீமா படுகொலையின் பின்னர் தோன்றியுள்ள அச்சநிலை…
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: அண்மையில் மட்டக்களப்பு மஞ்சந்தெடுவாய் பகுதியில் இடம்பெற்ற சஹாப்தீன் பாத்திமா சீமாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக காத்தான்குடி பகுதியில் ஒருவித அச்ச நிலை தோண்றியுள்ளது.
-
‘இலங்கை முஸ்லீம்களின் பேரம் பேசும் சக்தியை மீட்டெடுப்பது ஊவா முஸ்லிம்களின் கைகளில்’ – மு. கா. கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்
– பழுலுல்லாஹ் பர்ஹான் பதுளை: இலங்கை முஸ்லிம்களின் இழந்த பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றுக் கொள்வது பதுளை மாவட்ட முஸ்லிம் வாக்காளரின் கைகளிலேயே தங்கியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முபீன் தெரிவித்தார்.
-
சாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை ( Jersey ) வழங்கும் நிகழ்வு
– முஹம்மட் றின்ஸாத் சாய்தமருது: சாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் 2ம் ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாக இன்று சாய்ந்தமருது bismilla restaurants ல் சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இன்நிகழ்வில் கழக உயர் பீட உருப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் என்று பல இளைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
-
இந்திய கடலுக்கு அடியில் 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம்!
– SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370 இந்திய பெருங்கடலில் விழுந்த இடத்தில் 58 பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 மாயமானது.
-
‘ஜேவிபி அலுவலகங்கள் மீது தாக்குதல்’ – கஃபே
மொனராகல: ஊவா மாகாண தேர்தல் பிரச்சார வேளையில் இன்று மொனராகல மாவட்டத்தில் ஜேவிபி கட்சியின் 4 அலுவலகங்கள் இலக்க தகடற்ற வாகனங்களில் வந்தவர்களால் தாக்கப்பட்டதாக கஃபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
அவசரமாகத் தரையிறங்கிய மலேசியன் விமானம்!
– SHM கோலாலம்பூர்: ஏற்கனவே இரண்டு விமானங்களையும், அதில் பயணம் செய்த 525 பேரை முழுதாக பறி கொடுத்த நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஹைதராபாத்துக்கு செல்லவிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது.
-
இணையத்தள லொட்டரியும் ஏமாந்த இந்தியப் பெண்ணும்!
மும்பை: மும்பையை சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கிலாந்து லொட்டரியில் ரூ.3.5 கோடி பரிசு விழுந்திருப்பதாகக் கூறி அவரிடம் ரூ.11.5 லட்சம் பணம் பறித்த நைஜீரியாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பிரிட்டிஷ் தொண்டு ஊழியர் இஸ்லாமிய தேசப்படையால் சிரச்சேதம்: பின்னணியில் அமெரிக்கா?
லண்டன்: சிரியாவில் சுமார் 18 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் தொண்டு ஊழியர் டேவிட் ஹேய்ன்ஸை, இஸ்லாமிய அரசு படையினர் சிரச்சேதம் செய்வதைப் போல் காட்டும் வீடியோவை அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
-
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.
-
குருக்கள்மடம்: அடையளப்படுத்தப்பட்ட இடம் தொடர்பில் கருத்து முரண்பாடு காணப்பட்டதால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய நிபுணர் குழு பொலீசாருக்கு அறிவுறுத்தி கொழும்பு திரும்பியது
– வாரஉரைகல் குருக்கள்மடம்: கடந்த மாதம் தோண்டப்படவிருந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குருக்கள்மடம் எனுமிடத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் காத்தான்குடி முஸ்லிம்களின் புதைகுழிப் பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக டாக்டர். அஜித் தென்னக்கோன் தலைமையில் பத்து சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று இன்று (13.09.2014) சனக்கிழமை காலை 08:30 மணிக்கு குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்தது.
-
‘அணுகுண்டுகளைவிட போதைவஸ்த்துக்கள் ஆபத்தானது’- சவுதி சிரேஷ்ட முஃப்தி
– MJ றியாத்: அணுகுண்டுகளைவிட போதைவஸ்த்துக்கள் பயங்கர ஆபத்துக்களை விளைவிக்கக்கூடியவை என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முஃப்தியும், சிரேஷ்ட அறிஞர்கள் கவுன்ஸிலின் தலைவருமான அப்துல் அஸீஸ் அஸ்ஷெய்ஹ் எச்சரித்துள்ளார். சவுதி வானொலி நிகழ்ச்சி ஒன்றிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.