-
ஏறாவூரில் புகையிரதத்தை மறித்து மக்கள் போரட்டம்!
எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் ஏறாவூர்: ஏறாவூரில் நேற்று (17) மதியம் புகையிரதத்தை மறித்து பொதுமக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம் நகர சபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் தலையீட்டையடுத்து கைவிடப்பட்டது.
-
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேச கடலிலிருந்து டொல்பின் ஒன்று உயிருடன் கரையொதுங்கியுள்ளது
எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் மட்டக்களப்பு: சந்திவெளி, பாலையடித்தோணா பிரதேச கடலிலிருந்து டொல்பின் ஒன்று நேற்றுமாலை உயிருடன் கரையொதுங்கியுள்ளது. சுமார் 5 அடி நீளம் மற்றும் 30 கிலோ எடையும் கொண்ட இந்த டொல்பினை சில மணிநேரம் கரையில் பார்வையிட்ட பின்னர் மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டனர்.
-
தலிபான் மிருகவாதிகளின் தாக்குதல்: 3 நாள் துக்க தினம் அனுஷ்டிப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பெஷாவரில் பொரும்பான்மை சிறுவர்கள் உட்பட 141 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூர தாக்குதலுக்கு மூன்று நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதோடு நாடெங்கும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 132 சிறுவர்கள் மற்றும் 9 பணியாளர்கள் அடங்குகின்றனர். கொல்லப்பட்டவர்களது உடல்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
-
ஜனாதிபதித் தேர்தலும் தொடரும் சட்டமீறல்களும்
கொழும்பு: அடுத்த மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள அதேவேளை, தேர்தல் நடைமுறைகளை மீறுகின்ற செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கஃபே தேர்தல் கண்காணிப்பு குழு கூறியிருக்கின்றது.
-
மஹிந்தவின் வரவை முன்னிட்டு இரு நாட்கள் கடைகளை மூடுமாறு உத்தரவு!
– நமது நிருபர் காத்தான்குடி: நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பொதுஜன சுதந்திர முன்னணியின் அரசியல் பிரமுகர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காக காத்தான்குடிக்கு வரவிருக்கின்றனர். இந்நிகழ்வினை முன்னிட்டு, குறித்த தேர்தல் பிரச்சாரம் இடம்பெற இருக்கும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள கடைகளை இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் மூடுமாறு ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் பணித்துள்ளனர்.
-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள உலமாக்களுக்கும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி; ஜனாதிபதி தேர்தல்(2015) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள உலமாக்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பொன்று காத்தான்குடியில் 17-12-2014 நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது.
-
ஜனாதிபத் தேர்தல் தொடர்பான பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கடிதம்
காத்தான்குடி;பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அழைப்பினில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளவென எதிர் வரும் (19.12.2014 வெள்ளிக்கிழமை) காத்தான்குடிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வருகை தொடர்பாக அமைச்சரினால் பலதரப்பட்டவா்களுக்கும் அனுப்பபட்டு வரும் கடிதம்.
-
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களுடன் NFGG விஷேட சந்திப்பு
NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் (NFGG) இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று நேற்று 16.12.2014 கொழும்பில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பிரதேசத்தில் திவிநெகும பயனாளிகள் 450 பேருக்கு வீடு திருத்துவதற்கான முதற்கட்ட மானிய உதவி வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம் ‘எனும் தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவி வழங்கும் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கையில் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
-
நாளை பா. உ. அமீர் அலியினை வரவேற்கும் நிகழ்வு இடை நிறுத்தம்!
எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற எம்.எஸ்.எஸ். அமீர் அலியினை வரவேற்க்கும் நிகழ்வு நாளை (18) வியாழக்கிழமை ஓட்டமாவடியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருத்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்வு இடை நிறுந்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனா்.
-
காத்தான்குடியில் அமைக்ப்பட்டுவரும் மஹிந்தவின் தேர்தல் மேடை
– நமது நிருபர் காத்தான்குடி: நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தினை முன்னிட்டு காத்தான்குடிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மஹிந்த, காத்தான்குடி ஹிஸ்ல்லாஹ் வளையாட்டு மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். இதற்கான நீலப்படையின் தேர்தல் மேடையும் மக்கள் பார்வையரங்கு கூடாரமும் கடும் மழைக்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருகிறது.