-
தேர்தல் கூடாரக் கம்பி விபத்து: 6 பெண்கள் காயம்: நால்வர் மட்டு மருத்துவமனைக்கு மாற்றம் (இரண்டாம் இணைப்பு)
– நமது நிருபர் காத்தான்குடி: இன்று பி.ப. காத்தான்குடியில் மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தினைக் காண்பதற்கு அதிகளவான பெண்கள் வருகை தந்திருந்தனர். பெண்கள் கூடாரத்தின் பிரதான கம்பி, எதிர்பாராமல் கீழ் நோக்கி விழுந்ததில் 6 பெண்கள் தலையிலும், உடலிலும் ஏற்பட்ட பாரிய காயங்கள் காரணமாக காத்தான்குடி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
-
ரணிலுடன் NFGG விஷேட சந்திப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் (NFGG) ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று இன்று (19.12.2014) இடம்பெற்றது. எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற இச்சந்திப்பில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான்,
-
மஹிந்தவின் தேர்தல் பிரச்சார பெண்கள் பகுதி: கம்பி தலையில் விழுந்து இரு பெண்கள் காயம்!
காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கடும் மழைக்கு மத்தியில் காத்தான்குடியில் இடம்பெற தயாராகிக் கொண்டிருக்கின்றது. அதிகமான பெண்களும் சிறுவர்கள், குழந்தைகள் என பெண்கள் பகுதியில் காண முடிகிறது.
-
பறவைகளால் பேரழிவுகளை முன்கூட்டியே உணரமுடியும்
நியுயோர்க்: இயற்கை பேரழிவுகள் நடப்பதற்கு முன்பே அவை குறித்து விலங்குகளால் முன்கூட்டி உணரமுடியும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். தொலைதூரம் பறந்துசெல்லும் பறவைகள் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர்கள் இந்த முடிவை அறிவித்திருக்கிறாரகள். கரண்ட் பயாலஜி என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
-
மட்டு-மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் செயற்படும் ரட்டவிருவோ அமைப்புக்களுக்கு 10000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் விஷேட நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெளிநாடுகளில் தொழிலுக்கு சென்றுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவ விஷேட திட்டங்களை தற்போது அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்றன. இதற்கென வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பிலுள்ள குடும்பங்களின் நலன்களுக்கென இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் உருவாக்கப்பட்ட ரட்டவிருவோ அமைப்பின் சங்கங்களுடாக இந்த உதவித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
-
இன்று காத்தான்குடியில் நடை பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொது மக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர். ஏற்பாட்டுக்குழுவினர்.
-டீன் பைரூஸ்- காத்தான்குடி: இன்று(19.12.2014 வெள்ளிக்கிழமை பி.ப. 02.00 மணிக்கு) காத்தான்குடி பொது மைதானத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் முதலாவது தோர்தல் பிரச்சாரக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ தாஜூல் மில்லத் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெறவுள்ளது.
-
மக்கா ஹரம் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து சர்ச்சை!
மக்கா: மக்கா ஹரம் பள்ளிவாசலை விரிவுபடுத்துவதற்கான அகழ்வு நடவடிக்கையின்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் எலும்புகள் பண்டைய அடக்கஸ்தலத்தைச் சேர்ந்ததல்ல என்றும் மிருகமொன்றின் எச்சமாக இருக்கலாம் என்றும் இரு புனித பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
-
மஹிந்தவின் உரைக்கு காத்தான்குடி மக்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது!
– இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: இன்று பி.ப. காத்தான்குடிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது வலக்கை முஸ்லிம் அமைச்சர்களும் மற்றும் பிர அரசியல் பிரமுகர்களும் வருகை தரவிருக்கின்றனர். அதி உத்தம இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், தேர்தல் காலங்களில் எங்கள் ஊருக்கு வருவதை நாங்கள் ஒரு போதும் எதிர்க்கவில்லை. காத்தான்குடி மக்கள் சார்பாக உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
NFGGயின் முன்மொழிவுகள் மைத்திரியிடம் கையளிப்பு
NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: ஆட்சிமுறை மாற்றம் தொடர்பில் பொது எதிரணிகள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களில் உள்வாங்கப்படவேண்டிய தமது மேலைதிக யோசனைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) உத்தியோகபூர்வமாகக் கையளித்தது.
-
காத்தான்குடிக்கு வருகை தருகின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் – ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் பகிரங்கக் கடிதம்
புவி ரஹ்மத்துல்லாஹ் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே! இன்றைய தினம் நீங்கள் எமது காத்தான்குடி நகருக்கு வருகை தருவதையறிந்து இந்நகரத்தின் மக்களாகிய நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் உங்களை வரவேற்கின்றோம்!
-
பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பங்கேற்பு
NFGG ஊடகப்பிரிவு பொல்கஹவெல: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதாரித்து நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரப் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கெடுத்து வருகின்றது.
-
காத்தான்குடியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள தேர்தல் மேடை – படங்கள்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நாளை 19-12-2014 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.