காத்தான்குடி: நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தினை முன்னிட்டு காத்தான்குடிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மஹிந்த, காத்தான்குடி ஹிஸ்ல்லாஹ் வளையாட்டு மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார். இதற்கான நீலப்படையின் தேர்தல் மேடையும் மக்கள் பார்வையரங்கு கூடாரமும் கடும் மழைக்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட கூடாரம், உயரம் போதாமையினால், அகற்றப்பட்டு, உயர்த்தி பின்னர் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது.
அமைக்கப்பட்டு வரும் இத்தேர்தல் மேடையையும், கூடாரத்தையும் பார்வையிடுவதற்கு மைதானத்திற்குள் பொதுமக்கள் செல்ல பாதுகாப்புப் படையினர் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment