-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சியை நோக்கி ஆட்சி முறை மாற்றத்திற்காக பொது எதிரணியினர் ஒன்றுபட்டுள்ளமை, சமகால அரசியலில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. இந்த சந்தர்ப்பத்தில், பொது வேட்பாளரை நிபந்தனை எதுவுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) முன்வந்துள்ளதை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) முழு மனதுடன் வரவேற்கிறது.
-
மைத்திரீபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரமுகர்களின் உரை (ஒலிப்பதிவு)
– ஒலிப்பதிவு -பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மைத்திரீபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து 02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரமுகர்களின் உரையின் ஒலிப்பதிவை இங்கே கேட்கலாம்.
-
காத்தான்குடியில் கைக்குண்டு வீச்சுக்கள்
– விசேட நிருபர் காத்தான்குடி: நேற்றிரவிலிருந்து காத்தான்குடியில் ஆளும் தரப்பினரால் மிக மோசமாக கட்டவிழ்த்துப்பட்டுவரும் அரசியல் அநாகரீக செயற்பாடுகளின் உச்சகட்டம் இன்று அதிகாலையிலிருந்து இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தினம் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் ஏற்பாட்டாளார்கள் மற்றும் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் என்பவர்களது வீடுகள் மீது இன்று அதிகாலையிலிருந்து கைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
-
காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி ஆற்றிய உரையின் முழுமையான (ஓடியோ) ஒலிப்பதிவு
– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் மைத்திரீபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து 02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி ஆற்றிய உரையின் முழுமையான ஓடியோ ஒலிப்பதிவு எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.
-
“மக்களின் விடிவிற்காக தோற்றம் பெற்ற இக்கட்சி மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக முடிவெடுப்பது என்பது ஆபூர்வத்திலும் அபூர்வமாகும்”: ஹக்கீம்
– எம்.ரீ.எம். பர்ஹான் சம்மாந்துறை: ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக நீண்ட அமைதியை மேற்கொண்டது தொடர்பாக மக்கள் பல விசனங்களை தெரித்து வந்தார்கள். இது தொடர்பாக இன்று சம்மாந்துறை விளினயடி சந்தியில் நேற்று இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னால் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்,
-
பிரதேச சபை உறுப்பினரால் KCDA க்கு நிதி கையளிப்பு
– KCDA கல்குடா: கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஜனாப். கௌரவ. எஸ்.ஏ. அன்வர் – ஆசிரியர் அகியோருக்கான சினேகபூர்வமான சந்திப்பொன்று 2015.01.01ஆந்திகதி வியாழக்கிழமை பி.ப. 07.30 மணியளவில் KCDA யின் காரியாலயத்தில் நடைபெற்றது.
-
மைத்திரீபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரீபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து 03-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
-
தேர்தல் காலம் வந்தால் மாத்திரம் உங்களிடம் வந்து பொய் வாக்குறுதிகளை தரும் பொய்யர்களின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்
-டீன்பைரூஸ்- காங்கயனோடை;ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ஆரயம்பதி காங்கயனோடையில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று (02.01.2014 வெள்ளிக்கிழமை) பிப் 04.30 மணிக்கு காங்கயனோடை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் அருகில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் பதட்டம்!!
– விசேட நிருபர் காத்தான்குடி: இன்று காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவில் பொறியியலாளர் சிப்லி பாரூக் தலைமையில், ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனாவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தை, ஆரம்பத்தலிருந்தே பல வழிகளிலும் தடுத்து நிறுத்த ஆளும் தரப்பினர் அதிகப்பிரயத்தனம் எடுத்திருந்தனர்.
-
காத்தான்குடியில் பொறியலாளர் சிப்லி பாரூக்கின் தேர்தல் அலுவலகம் தாக்கப்பட்டது! (இரண்டாம் இணைப்பு)
– விசேட நிருபர் காத்தான்குடி: பொது வேட்பாளர் மைத்திரதிபால சிரிசேனாவை ஆதரித்து இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவில் இடம்பெற்றது.
-
மக்கள் கை தட்டாததால் மஹிந்த அதிருப்தி!
காங்கேசன்துறை: காங்கேசன்துறையிலிருந்து உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு செல்லும் யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. இன்று நடந்த கூட்டதின் போது அங்கிருந்த அறிவிப்பாளர் 100 தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி வரும்போது கைகளை தட்டி அவரை ஆரவாரம் செய்யும் படி கூறியும் எவரும் மனமுவந்து கை தட்டாததால் மனமுடைந்த மஹிந்த மைதானத்தில் இருந்தே புறப்பட்டு சென்று விட்டார்.