-டீன்பைரூஸ்-
காங்கயனோடை;ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ஆரயம்பதி காங்கயனோடையில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று (02.01.2014 வெள்ளிக்கிழமை) பிப் 04.30 மணிக்கு காங்கயனோடை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் அருகில் இடம்பெற்றது.
வரலாற்றில் என்றும் இல்லாதவாறு ஆயிரக்கனக்கான பெண்கள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் தேர்தல் உரையினை கேட்க ஆவலுடன் வந்திருந்ததினர்.
அங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தேர்தல் காலம் வந்தால் மாத்திரம் உங்களிடம் வந்து பொய் வாக்குறுதிகளை அழித்து உங்கள் வாக்குகளை கேட்பதும் பின்னர் தேர்தல் முடிந்து விட்டால் ஊரை விட்டு ஏன் இந்த நாட்டை விட்டு விட்டு கூட ஓடும் .இந்த பொய்யர்களின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்.
நீங்கள் மைத்திரிக்கு வாக்களித்தால் நாளை நமது சமூகம் அனாதையாக,ஆதரவின்றி வாழ வேண்டி ஏற்படும் என்பதனை மிகத் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.






Leave a comment