மக்கள் கை தட்டாததால் மஹிந்த அதிருப்தி!

kksகாங்கேசன்துறை: காங்கேசன்துறையிலிருந்து உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு செல்லும் யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. இன்று நடந்த கூட்டதின் போது அங்கிருந்த அறிவிப்பாளர் 100 தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி வரும்போது கைகளை தட்டி அவரை ஆரவாரம் செய்யும் படி கூறியும் எவரும் மனமுவந்து கை தட்டாததால் மனமுடைந்த மஹிந்த மைதானத்தில் இருந்தே புறப்பட்டு சென்று விட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் இந்த ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்தனர்.

kks

Published by

Leave a comment