-
பிராவோ, பொல்லார்ட் நீக்கப்பட்டது ஏன்?
பார்படாஸ்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்திய அணியில் இருந்து சகலதுறை வீரர்களான பிராவோ, பொல்லார்ட் நீக்கப்பட்டுள்ளனர். உலகின் தலை சிறந்த வீரர்களான இருவரும் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படாதது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இது வேதனையை ஏற்படுத்தியது.
-
விமல் வீரவன்சவின் மைத்துனர் குற்ற புலனாய்வு பிரிவினால் கைது
கொழும்பு: வடக்கில் பல்வேறு சம்பவங்கள் இடம் பெறுவதாக தவறான பிரச்சாரங்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேக்த்தின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மைத்துனர் ரணசிங்க ரன்துவ முதியன்சலாகே அஜித் குமார என்பவர் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
‘நீலப்படையணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார்’:நாமல் ராஜபக்ஸ
கொழும்பு: எமது நீலப்படையணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஸ தலைமையிலான நீலப்படையணிக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க அறிவித்திருந்தார்.
-
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இரத்த வங்கி கட்டித்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நெதர்லாந்து அரசாங்கத்தின் 3 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் 2 மாடிகளைக் கொண்ட இரத்த வங்கி கட்டித்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
-
“தோல்வியிலும் இனவாதம் பேசுகிறார் முன்னாள் ஜனாதிபதி”- : NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: ‘நடந்து முடிந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பானது, இனவாதத்தினைத் தோற்கடிக்கும் தீர்ப்பாகவே அமைந்திருக்கிறது. இருந்த போதிலும், மக்களால் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தோல்வியிலும் இனவாதம் பேசுவது கவலையளிக்கிறது’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
மஹிந்த, பசில், கோத்தபாய உட்பட பலருக்கு லஞ்ச ஊழல் விசாரணை
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக லஞ்ச மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மேல் மாகாணசபை ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு
கொழும்பு: மேல் மாகாண சபையின் பிரதான அமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட மேல் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
-
மீண்டும் முகமது நபி (ஸல்) சித்திரத்துடன் “ஷார்லி எப்டோ” இதழின் புதிய பதிப்பு
லண்டன்: தாக்குதலுக்குள்ளான பிரஞ்சு நையாண்டி இதழ் “ஷார்லி எப்டோ”வின் புதிய பதிப்பில் இறைதூதர் முகமது நபி (ஸல்), “நான் ஷார்லி” என்ற வாசகம் பொறித்த அட்டையை தாங்கியிருக்கும் வரிச்சித்திரத்தை அட்டையில் தாங்கியிருக்கும். இந்த சித்திரத்துக்கு மேல் பகுதியில், “எல்லாம் மன்னிக்கப்பட்டது” என்ற வாசகங்களும் இருக்கும்.
-
“எமது சமூகத்தை கௌரவித்த எமது தேசிய தலைவருக்கு மிகவும் முக்கியமான இந்த அமைச்சு கொடுக்கப்பட்டுள்ளது”
கொழும்பு: தகுந்த தருணத்தில் தகுந்த முடிவெடுத்து தகுந்த ஜனாதிபதியை தெரிவு செய்து அத்தெரிவில் நாமும் ஓரு மிக முக்கிய பங்காளிகளாக இருக்கின்றோம் என்பது இன்று எமது தேசிய தலைவர் மாண்புமிகு அமைச்சரும் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் கொடுத்திருக்கின்ற அமைச்சின் மூலம் நாம் தெளிவடையலாம்.
-
முகங்களையும் முகாம்களையும் மறந்து “மைத்ரி” இலக்குகளை அடைவோம்
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: நூறு நாள் வேலைத்திட்டத்துடன் எதிர்க் கட்சிப் பொது முன்னணி ஒரு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கொண்டுள்ளது. அமுலில் உள்ள அரசியலமைப்பின் தயவிலேயே பாராளுமன்றத்தில் பெரும் பான்மை கொண்டுள்ள ஒரு ஆட்சியை “மைத்திரி” குழுமத்தினால் மாற்ற முடிந்துள்ளது.
-
ஜனாதிபதித் தேர்தலன்று 500 கோடி ரூபா பணத்தை வங்கிகளில் இருந்து எடுத்துள்ள மஹிந்தவின் புதல்வர்கள்!!!
கொழும்பு: இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள் இலங்கையில் உள்ள வங்கிகளில் இருந்து 500 கோடி ரூபா பணத்தை எடுத்துள்ளதாக தற்பொழுது மற்றுமொரு இரகசியம் வெளிவந்துள்ளது.
-
இன்று இலங்கை வருகிறார் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ்
கொழும்பு: மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இன்று இலங்கை வருகிறார். இன்று காலை 8.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையும் பரிசுத்த பாப்பரசருக்கு விமான நிலையத்தில் அரச வரவேற்பளிக்கப்படவுள்ளது.