Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இனங்களுக்கிடையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தினாலே ஒற்றுமை சாத்தியம்

    கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினர் தமது அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக சில விடயங்களில் குரல் எழுப்பினாலும், அவர்களுக்கும் புதிய ஆட்சியாளர்களுக்கு மிடையில் நல்லுறவு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு கூறியுள்ளார்.

  • இனவாதம், மதவாதத்தை தூண்டினால் 2 வருட சிறை

    கொழும்பு: இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையிலான கருத்து வெளியிடும் நபர்களுக்கும் அவ்வாறான செய்திகளை பிரசுரிக்கும் நபர்களுக்கும் இரண்டுவருட சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படவுள்ளது.இதற்கேற்ப, குற்றவியல் சட்டக் கோவையில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

  • இந்தியாவின் பிரபல ஜவுளிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமெராவைக் கண்டு பிடித்த இந்திய பெண் அமைச்சர்!

    பனாஜி: இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவில் சொப்பிங் செய்கையில் பிரபல ஜவுளிக் கடை ஒன்றின் உடைமாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவை கண்டுபிடித்தார். இந்திய மத்திய கல்வித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவாவில் விடுமுறையை கழிக்கச் சென்றார். கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள கன்டோலிம் நகருக்கு சென்ற அவர் சொப்பிங் செய்ய திட்டமிட்டார். 

  • 2050ல் உலகில் அதிக முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்பார்கள்

    லண்டன்: 2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அதேபோல, தற்போதைக்கும் 2050க்கும் இடையில் இந்துக்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  • NFGGயின் ஏற்பாட்டில் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

    NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி ரோயல்ஸ் விளையாட்டுக் கழகதிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.

  • ஜனாதிபதி மைத்திரியின் மட்டு விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு தீவிரம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 04-04-2015 நாளை சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனால் தற்போது மட்டக்களப்பு நகரில் பொலிசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

  • காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2015ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு விபரம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2015ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு 03-04-2015 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இந் நிருவாகத் தெரிவில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்…

  • ஓட்டோ பைலட் மோடில் ஜெர்மன்விங்ஸ் விமானத்தை மலை மீது மோதிய துணை விமானி: திடுக்கிடும் புதிய தகவல்

    பரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை துணை விமானி வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கியது வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவான தகவல்களில் இருந்து தெரிய வந்துள்ளது. ஸ்பெயினில் இருந்து ஜெர்மனியில் உள்ள டுசல்டர்ப் நகருக்கு 150 பேருடன் சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானம் பிரான்சில் உள்ள அல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

  • யெமனில் இருந்து கண்ணீருடன் நாடு திரும்பிய கேரளத்து தாதியர்

    ட்ரிவாந்திரம்: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள யெமனில் பணிபுரியும் இந்திய தாதியர்கள் கடன் தொல்லையால் நாடு திரும்ப மறுத்து அங்கேயே தங்கியுள்ளனர். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள யெமனில் 4 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் 349 பேர் முதல்கட்டமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

  • கோட்டே பீகொக் மாளிகையை வாங்கிய மஹிந்த

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோட்டே பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகேவுக்கு சொந்தமான பீகொக் மாளிகை என்ற பெயரில் அழைக்கப்படும் மாளிகையை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த மாளிகையை தான் மகிந்த ராஜபக்சவுக்கு இலவசமாக வழங்கியதாக லியனகே கடந்த வாரம் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

  • “மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் சிறந்த கழகம் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகம்”: யூ.எல்.எம்.என்.முபீன் புகழாரம்.

    – ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகம் 2015 ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதினை இட்டு நான் மிகவும் மகிழ்சிசியடைகின்றேன் என முன்னால் கிழக்கு மாகாகண சபை உறுப்பினரும் அமைச்சர றவூப் ஹக்கீம் இன் இனைப்ப செயலாளருமாக யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

  • முரண்பாட்டு முகாம்களுக்குள் முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை இழந்து தவிக்கின்றதா ?

    கொழும்பு: தனிமனிதாக,குடும்பமாக,சமூகமாக,தேசமாக,உம்மத்தாக,சர்வதேசமாக மனிதன் வாழ்வதற்கே காலத்திற்குக் காலம் நபிமார்களும், தூதுவர்களும், இறை தூதுகளுடன் அருளப்பட்டனர். ஆன்மீக பயிற்சிகள் ஆயினும்,அகீதத் ஆயினும் ஷரீஅத் ஆயினும் கிலாபாத் ஆயினும் அவை குறித்த பிக்ஹு அல்லது இஜ்திஹாது எல்லாமே மறுமைக்கான விளைநிலமான இன்மை வாழ்வில் மனிதனின் உயிரிலும் மேலான தீன்,உயிர்,அறிவு,உடைமைகள்,பரம்பரை என்ற அடிப்படை அம்சங்களை மையப் படுத்தியதாகவே அமைந்திருக்கின்றன.

←Previous Page
1 … 473 474 475 476 477 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar