-
காத்தான்குடியில் புண்ணிய தானம் எனப்படும் நெல் தானமளிக்கும் தேசிய நிகழ்வுகளில் இஸ்லாமிய முறைப்படியான நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புண்ணிய தானம் எனப்படும் நெல் தானமளிக்கும் தேசிய நிகழ்வுகளில் இஸ்லாமிய முறைப்படியான நிகழ்வு கடந்த 15 புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலுள்ள முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.
-
காத்தான்குடி நகர சபையின் முதல்வர் அஸ்பர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.இத்துடன் இணைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சம்மந்தமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கடந்த 15-04-2015ம் திகதி காத்தான்குடி நகர முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி இஸ்லாமிய அரும்காட்சியகம் சம்மந்தமாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பன விடுத்துள்ள முக்கிய அறிக்கைகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த 15-04-2015 மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட காத்தான்குடி இஸ்லாமிய அரும்காட்சியகம் சம்மந்தமாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பன விடுத்துள்ள முக்கிய அறிக்கைகள் இத்துடன் எமது இணையத்தள வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
-
62 எம்.பிகள் மஹிந்தவுடன் சந்திப்பு!
தங்காலை: ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் 62 பேர் உட்பட சுமார் 100 ஐ.ம.சு.மு. மக்கள் பிரதிநிதிகள் நேற்று தங்காலை கால்டன் இல்லத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, டளஸ் அலஹப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபேகுணவர்தன, விமல் வீரவன்ச, சாலிந்த திசாநாயக்க,
-
அமைச்சர் ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தீர்மானம்
கொழும்பு: நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பிக்க ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் 100 நாட்களுக்குள் நாசமடைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவே பிரதான காரணம் என்பதால் 19 அம்சங்களினடிப்படையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர இருப்பதாக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.
-
காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலை தொடர்பில் அ.இ.ஜ.உலமா பத்வாக் குழுவின் கடிதம்
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூதனசாலை’ தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு நேற்றைய தினம் (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-
மலேசியா பல்கலைக்கழக முகாமைத்துவ குழுவினர் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: மலேசியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் (UCTS) பல்கலைக்கழக முகாமைத்துவ குழுவினர் இன்று கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
-
காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை பார்வையிட வருகை தரும் வெளியூர் மக்களுக்கு விஷேடமாக நேரம் ஒதுக்கீடு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் காத்தான்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக நேற்று 15-04-2015 புதன்கிழமை அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலையை (மியூசியத்தை) பார்வையிட அதிகளவான வெளியூர் பொது மக்கள் அங்கு வருகை தருவதால் அதற்கான நேரம் விஷேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
துபாயில் இடம்பெற்ற சிங்கள தமிழ் புதுவருட கொண்டாட்டம் – 2015
ACM. Sabry துபாய்: துபாயில் உள்ள இலங்கைப் பிரதித்தூதுவராலயமும், இலங்கை கலாசார மன்றமும் இணைந்து சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றினை கடந்த 12.04.2015 அன்று லத்திபா மைதானத்தில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்து இருந்தது.
-
T20 ஆக மாறிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி
டாக்கா: ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வருடத்திலிருந்து 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முதன்மை அதிகாரி சைட் அஸ்ரபுல் அக் தெரிவித்துள்ளார்.
-
21 ஆம் திகதி பஷில் வருகிறார்
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பஸ் விபத்தில் 30 க்கும் அதிகமானோர் காயம் : பசறையில் சம்பவம்
பசறை: மடுல்சீமை – பசறை வீதியில் 2 ஆவது மைல்கல் அருகே இடம்பெற்ற பஸ் விபத்தில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.