-
ஹிஸ்புல்லாவின் பூர்வீக நூதனசாலையும் எழுகின்ற விமர்சனங்களும் (வீடியோ)
– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் ஓர் ஆவணம் இருக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதி அமைச்சரும் இரண்டரை தசாப்பதங்களாக காத்தான்குடி அரசியலில் ஜாம்பவானாக இருந்து வரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏம்.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் தூர நோக்கு சிந்தனையுடன் பூர்வீக நூதனசாலையானது காத்தான்குடி பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு தற்காலிகமாக மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-
“தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தால் என்னால் அதனை புறக்கணிக்க முடியாது”: மஹிந்த
கொழும்பு: தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தால் என்னால் அதனை புறக்கணிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கார்டியனிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் நான் தீர்மானிக்கவில்லை, ஆனால் மக்கள் வேண்டுகோள் விடுத்தால் என்னால் புறக்கணிக்க முடியாது.
-
இலங்கை அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைக்கவிருக்கும் வாரம்!!
கொழும்பு: இலங்கை அரசியல் வரலாற்றில் பலவிதமான அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடிய வாரமாக இவ்வாரம் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் அடங்கிய நூறு நாள் வேலைத்திட்டத்தின் முடிவு நாளும் இவ்வாரத்திற்குள் வருகிறது.
-
வவுனியாவில் இடம்பெற்ற பிரமுகர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு
– இர்ஷாத் ரஹ்மதுல்லா வவுனியா: அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பபாடு செய்யப்பட்டிருந்த வடமாகாணத்தில் பல்துறைகளில் மக்கள் சேவையாற்றிய மற்றும் ஆற்றிவரும் பிரமுகர்களை கௌரவிக்கும் நிகழ்வு (2015-04-18) வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
-
பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் இலங்கைப் பெண்
லண்டன்: பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப் பெண் ஒருவர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 1979ம் ஆண்டு பிறந்த 36 வயதான ஷாமலி பெர்னாண்டோ, என்பவரே இந்த இலங்கைப் பெண் ஆவார் அவரது தாய் வனிதா பெர்னாண்டோ(தாதி), தந்தை சுமல் பெர்னாண்டோ(சட்டத்தரணி) ஆவர்.
-
ஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி
காபூல்: ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு, ஒரு வங்கிக்கு வெளியில் நிகழ்ந்ததாக, நங்கபர் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
-
‘தேர்தல் காலம் வந்ததும் கட்சி பாடலை போட்டு கல்குடா மக்களை ஏமாற்றுகின்றனர்’:பிரதி அமைச்சர் அமீர் அலி
– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஓட்டமாவடி: ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் காலங்களில் கல்குடாவுக்குள் பிரவேசித்து கட்சி பாடல்களை போட்டு பிரதேசத்தில் இருக்கின்ற அரசியல் தரகர்களின் உதவியுடன் கல்குடா மக்களை ஏமாற்றிச் செல்கின்றனர் என சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று வெள்ளிக்கிழ்மை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் கல்குடா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்திய 2011, 2012, 2013ம்
-
இலங்கை கிரிக்கெட்டில் அரச தலையீடு: பரிசீலிக்க ஐ.சி.சி தீர்மானம்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மேற்கொள் ளப்படும் அரச தலையீடுகளை பரிசீலிக்க சர் வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் கள் சபை இன்று கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
-
மஹிந்த மீண்டும் வந்தால் முஸ்லிம்களுக்கு ஆபத்து: எச்சரிக்கிறார் முஜிபுர் ரஹ்மான்
முஜிபுர் ரஹ்மான் கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் அது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக மாறிவிடும் என மேல்மாகாண சபை உறுப்பனரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
வடமாகாணத்திலியங்கும் அணைத்துப் பள்ளிவாசல்களையும் பதிவு செய்யும்படி வேண்கோள்: வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தெரிவிப்பு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: கடந்த இரு தசாப்த கால யுத்தம் நிறைவுற்று வடமாகாண முஸ்லீம்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி வருகின்ற நிலையில் வடக்கில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் அவசரமாக பதிவு செய்து கொள்ளும்படி வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழுவின் தலைவரும் வடமாகாண முஸ்லிம் சமய கலாசார அமைச்சரின் இணைப்பாளருமான மெளலவி ஏ.எச்.எம். முபாரக் (ரஷாதி) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும்: அமைச்சர் றிசாத் பதியுதீன்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரும், தமிழ் மக்கள் எம்மோடு இருக்கின்றார்கள் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள் இன ரீதியான சாயத்தை எம்மீது பூசுகின்றனர் என்றும் கூறினார்.
-
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கற்பிணி தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நாட்டில் நல்ல அபிவிருத்தியைத் திட்டமிடுவதாக இருந்தால் உடல் உள ஆரோக்கியமும் வளர்ச்சியும் பெற்ற சமூகம் இருத்தல் வேண்டும். அதற்கு ஆரோக்கியமான குழந்தைகளே தேவை என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் தெரிவித்தார்.