-
கொழும்பில் நிலத்துக்கடியில் ரகசிய முகாம்!
கொழும்பு: கொழும்பு மற்றும் திருகோணமலையில் கடற்படையினரால் பேணப்பட்டு வந்து இரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு சைத்திய வீதியில் ‘புட்டு பம்பு’ எனும் பெயரிலும் திருகோணமலை கடற்படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்திரவியல் விஞ்ஞான பீட வளாகத்தில் நிலத்துக்கு கீழ் ‘கன்சைட்’ எனும் பெயரிலும் கடற்படையின் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
புத்தளத்தில் ஐ.தே.க. வேட்பாளராக களமிறங்குகிறார் நவவி
– புத்தளம் அன்பன் புத்தளம்: எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்னால் வடமேல் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவி களமிறங்குகின்றார்.நீண்ட காலமாக அரசியலில் ஓய்வு பெற்றிருந்த நவவி, புத்தளம் மாவட்ட மக்கள் மத்தியில் மதிப்பும்,மறியாதையும் கொண்ட ஒருவராக இருந்து வந்தார்.
-
“லைலதுல் கத்ர்”
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது.
-
முன்னாள் சவுதி வெளிநாட்டு அமைச்சர் சஊத் அல் பைஸல் காலமானார்
– MJ றியாத்: சவுதி அரேபியாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சராகவிருந்த சஊத் அல் பைஸல் நேற்று வியாழக்கிழமை தனது 75வது வயதில் காலமானார். 1975ம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 2015 வரையுள்ள 40 வருடகாலமாக வெளிநாட்டு அமைச்சர்
-
ஜனநாயகத்தை பாதுகாக்க தன்னை அர்ப்பணித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க
கொழும்பு: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையெழுத் திட்ட கையோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த முதல் நடவடிக்கை தனது உருவத்துடன் கூடிய சகல கட்அவுட்கள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தனது செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
-
லண்டன் சென்றுள்ள சந்திரிகா நாடு திரும்பியதும் முடிவு
கொழும்பு: பொதுத் தேர்தலுக்கான அரசியல் சூடுபிடித்திருக்கும் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவசரமாக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட குடும்ப நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு அவர் லண்டன் சென்றிருப்பதாக அவருடைய ஊடகச் செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
KKYsms’ இலவச சேவையின் 4ம் ஆண்டு நிறைவு!
காத்தான்குடி: இன்று இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் அனைவரிடத்திலும் பிரபல்யமாகி நன்மதிப்பைப் பெற்றுவரும் KKY குறுந்தகவல் சேவை (KKYsms), 10.07.2014 அன்றுடன் 4 வருட நிறைவைப் பெற்றிருக்கின்றது.
-
சிரியாவின் மோதலால் 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்
லண்டன்: சிரியாவின் நெருக்கடி தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டைவிட்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நாற்பது லட்சத்தை கடந்துவிட்டதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. “நமது தலைமுறையினர் சந்திக்கும் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி இது” என்று அந்த அமைப்பின் தலைவர் அண்டோனியோ குட்டெரஸ் இந்த நெருக்கடியை விவரித்துள்ளார்.
-
அளுத்கம கலவரம் குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி
கொழும்பு: கடந்த வருடம் அளுத்கம தர்கா நகர் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறியுள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறியுள்ளதாக குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சிலர் தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஆராய்ந்த நீதிபதிகள்,
-
குருநாகல் தொகுதியில் போட்டியிடுகிறார் மஹிந்த!
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பம் இட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார்.
-
KCDAயின் இப்தார் நிகழ்வு
– KCDA மீராவோடை: கல்குடாப்பிரதேசத்தில் அமைந்துள்ள சமூக சேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த இப்தாா் நிகழ்வு 2015.07.08ஆந்திகதி புதன்கிழமை மீராவோடையில் அமைந்துள்ள அமீா் அலி கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
-
பொதுத் தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கான சில ஆலோசனைகள்!
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: இறைவனின் நாட்டப்படி எதிர்வரும் ஆகஸ்டு மாதம் பொதுத் தேர்தல் இடம் பெறவுள்ளது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் போன்று இந்த நாடும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர் கொள்கின்ற அதி முக்கியமான தேர்தலாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.