Category: Your Kattankudy
-
அ.இ. ஜம்இய்யத்துல் உலமா அல்லாஹ்வைப் பயந்துகொள்ளட்டும்!
கிழக்கு: இலங்கையில் அரைவாசி மக்கள் நோன்பை விட்டு விட்டனர் புதன்கிழமை. கால்வாசிப்பேர் பெருநாள் தொழுகையும் தொழுதுவிட்டனர். இதற்கிடையில் நோன்பா-பெருநாளா என மக்கள் அலைமோதி இருந்தனர். இதற்கெல்லாம் காரணம் உலமாக்களே!
-
ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்
– அபூ அப்துல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். ”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).
-
பெருநாளைக்கு ஊருக்குப் போறேன்…(நோன்புப் பெருநாள் சிறுகதை)
–முகமட் ஜலீஸ், இங்கிலாந்து கட்டார் 3 வருட வேலைக் காலத்தை முடித்துவிட்டு 3 மாதகால விடுமுறையில் சொந்த ஊரான காத்தான்குடிக்கு நாளை இரவு விமானம் ஏறுகின்றான் அப்துல்லாஹ். செய்தி கேள்விப்பட்டதும் அவனது நண்பர்களும் இன்னும் பல ஊராட்களும் அவனைச் சந்தித்து முபாஸாபாச் செய்துவிட்டு, பெருநாளைக்கு தனது சொந்தங்களுக்கு கொடுத்தனுப்பும் சிறு பார்சல்களையும் அவனது கையில் கொடுத்துவிட்டு விடைபெறுகின்றனர்.
-
காத்தான்குடி பிரமுகர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்திகள்- ஒலிப்பதிவு
ஒலிப்பதிவு: பர்ஹான் 1-காத்தான்குடி, மட்டக்களப்பு ஆகிய ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.அலியார் பலாஹியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
-
ACJU வின் பிறை பார்ப்பதற்கான நியமங்களும் அவற்றின் குறைபாடுகளும்
எஸ்.எச்.எம். றிஸ்வி ACJU பிறை பாத்தால் தொடர்பில் பின்வரும் நியமங்கள் அல்லது விதிகளைக் கடைப்பிடிக்கின்றது. 1. பிறை வெற்றுக் கண்களால் (naked eyes) மாத்திரமே பார்க்கப்பட வேண்டும். 2. பிறை பூமியிலிருந்து பார்க்கப்பட வேண்டும்.
-
நோன்பு எமக்கு கற்றுத் தந்த பாடத்தை ஏனைய காலங்களிலும் தொடர்ந்து வாழ்வில் முன்னெடுக்க இன்றைய தினத்தில் உறுதி பூனுவோம்: ஹூனைஸ் பாருக்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: நோன்பு எமக்கு கற்றுத் தந்த பாடத்தை ஏனைய காலங்களிலும் தொடர்ந்து வாழ்வில் முன்னெடுக்க இன்றைய தினத்தினல் உறுதி பூனுவோம் என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக், நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் தமது ஈத் முபாரக் பெருநாள் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.
-
நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களது வாழ்வில் இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம்- அமைச்சர் றிசாத் பதியுதீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: அருள் மறை இறக்கப்பட்ட புனிதமான மாதத்தில் அதனது மகிமையினையும், மகோத்துவத்தையும், உன்னதமான பண்புகளையும் தம்மகத்தே உருவாக்கி இன்று ஈதுல் பித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களது வாழ்வில் இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
பேரினவாத விஷமச் சக்திகளின் கை மேலோங்குவதற்கு இன்னும் இடமளிப்பது ஆபத்தானது.அதனை நிறுத்த இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்-அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உள்நாட்டிலும், இஸ்லாமிய, அரபு நாடுகள் உட்பட சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம் சமூகம் அனுபவித்து வரும் இன்னல்களுக்கு மத்தியில் மீண்டும் ஓர் ‘ஈதுல் பித்ர்’ பெருநாளை சந்திக்கிறோம். இந்த அவலங்களில் இருந்தும், துன்ப துயரங்களில் இருந்தும் மீள்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!
-
மட்டு பொலிஸாரின் வீதி அணிவகுப்பு மரியாதை
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஆறுமாதங்களுக்கு ஒரு தடைவை நடைபெறும் மட்டக்களப்பு பொலிஸாரின் வீதி அணிவகுப்பு மரியாதை இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. பேண்ட் வாத்தியத்துடன் ஆரம்பமான இப்பேரணி மட்டக்களப்பு டெலிகொம் சந்தியிலிருந்து திருமலை வீதியூடாக நகர மணிக்கூட்டு கோபுரசுற்று
-
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பிரமுகர்களின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி – ஓடியோ ஒலிப்பதிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம் எல். ஏ. எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோரின் நோன்புப் பெருநாள்
-
காத்தான்குடி பெருநாள் பஸாரில் ஆற்றிற்கு நடுவில் மிதக்கும் சிறிய உணவகம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்திற்கு கிண்ணியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட படகுப்பாதை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது இம்முறை ஆற்றிற்கு நடுவில் மிதக்கும் சிறிய உணவகமாக இயங்கவுள்ளதாகவும் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ். எச். எம். அஸ்பர் தெரிவித்தார்.