Category: Your Kattankudy
-
பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆவாரன் என்ற ஒதுக்குப்புறமான மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் இரண்டாவதாக நடந்துள்ள நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். முதலாவது பூகம்பம் ஏற்பட்டபோது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தனர்.
-
கல்முனை மாநகர முதல்வர்-துறைமுக அதிகார சபையின் தலைவர் சந்திப்பு
– FM.பர்ஹான் கல்முனை: கல்முனைமாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் டொக்டர். பிரியெந்த பி. விக்ரமவை நேற்று (26.09.2013) துறைமுக அதிகார சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட மீன் பிடி படகுகளை நிறுத்துவதில் கடந்த காலங்களில் பிரதேச மீனவர்கள்
-
இலங்கைக்கான ஜோர்டான் நாட்டு பிரதிநிதி-கல்முனை மாநகர முதல்வர் சந்திப்பு
– FM.பர்ஹான் கல்முனை: இலங்கைக்கான ஜோர்டான் நாட்டு பிரதிநிதி (கொன்சலேட்) அபாஸ் அக்பர் அலியை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று முன்தினம் (25.09.2013) சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது கல்முனை மாநகர சபையின் எதிர்கால நடவடிக்கைகள், மாநகரத்தின் தேவைப்பாடுகள் மற்றும் மாநகர வாழ் மக்களின் ஜீவனோபாயம் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
-
சந்தன மரம் புத்தக வெளியீடு
– FM. பர்ஹான் மருதமுனை: புரவலர் புத்தக பூங்காவின் 33வது வெளியீடான மருதமுனையை சேர்ந்த புன்னகைவேந்தன் பாறூக்கின் சந்தன மரம் புத்தக வெளியீட்டின் போது அதன் சிறப்பு பிரதிகளை மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைப்பதையும் அருகே புரவலர் ஹாஷிம் உமர்,
-
முப்பது வருடங்களின் பின் சந்திக்கும் இரு துருவங்கள்….
நியுயோர்க்: 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அமெரிக்கா- ஈரான் ஜனாதிபதிகளிடையே தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஈரானில் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஈரானின் அணுசக்தி உற்பத்தி குறித்தும் எதிர்ப்பு எழுந்தது.
-
‘பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்துகொண்டு வாருங்கள்’- அஸ்வர்
கொழும்பு: இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்தார்.
-
‘முட்டாள்தனமான அவசர சட்டம்’- ராகுல் விமர்சனத்தால் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா?
– SHM டெல்லி: தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதால் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தமக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருதுவதால் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை பொருத்தவரையில் அவருக்கு இருமுகம் இருக்கின்றது
– அபூ அஸ்ஜத் நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலின் பின்னரான முடிவுகளை வைத்து பல்வேறுபட்ட கருத்துக்களையும், விமர்சனங்களையும், கட்சிகளும் தனிப்பட்ட அமைப்புக்களும் வெளியிட்டுவரும் நிலையில் அதற்கு அப்பால் சென்று சமூகத்தின் தேவைப்பாடுகள் குறித்து நோக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் என்பதை கவனத்திற் கொண்டவனாக இந்த கட்டுரையினை எழுதுகின்றேன்.
-
அந்தக்கடை உரிமையாளர் இது இவருக்கு தேவையில்லை எனக்கூறியும் அத்தாய் விடாப்பிடியாக அவன் கேட்பதைச் செய்துகொடுங்கள்…..
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: குழந்தைகள் எமது அமானிதமாகும். இதற்கு மறுமையில் பொறுப்புச் சொல்லியாக வேண்டும். இவ்விடயம் இன்று மிகக் கேள்விக் குறியாகியுள்ளது. இவ்வாறு காத்தான்குடி ஐம்இய்யத்துல் உலமா சபைச் செயலாளரும் காத்தான்குடி பிரதேச செயலக பட்டதாரிப் பயிலுனருமான மௌலவி எம்.எச்.எம்.ஜிப்ரிப்ரி (மதனி) தெரிவித்தார்.
-
சிரியாவில் போராடும் பல படைப் பிரிவினர் ஒன்றிணைந்து விடுத்துள்ள அறிவித்தல்
– அஹமட் ஆஸிர் அதன் சாராம்சம் கீழ் வருமாறு : 1. சிரியாவில் போராடும் ராணுவ பிரிவினரும், சிவிலியன் பிரிவினரும் ஒரு இஸ்லாமிய கட்டமைப்பின் கீழேயே செயல்பட வேண்டும்.
-
இரட்டைக் கர்ப்பப் பையுள்ள இளம் தாய்: வைத்தியர்கள் அதிசயம்!
தம்புள்ள: இரண்டு கர்ப்பப்பைகளுள்ள இளம் தாய் தனது இரட்டைக் கர்ப்பப் பைகளிலும் இரண்டு பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். கடந்த (26) வியாழக்கிழமை, தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலையில் அறுவை சிகிச்சையின் மூலம் இந்த பிரசவம் நிகழ்ந்துள்ளது.
-
சவூதியில் 3 போலி ஹஜ் முகவர் நிலையங்கள் கண்டுபிடிப்பு!
– SHM ஜித்தா: அரபியர்கள், சவூதியைச் சேர்ந்த சிலர் மற்றும் ஆசியர்கள் சிலர் நடத்திய 3 போலி ஹஜ் முகவர் நிலையங்களை ஜித்தா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஹஜ் புனித பயணம் செல்ல மக்களிடம் வாங்கிய 50,000 சவூதி ரியாலை பொலீசார் பறிமுதல் செய்தனர்.