Category: Your Kattankudy
-
நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவுக்கு பேரழிவு: மன்மோகன்சிங்
– SHM டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்குப் பேரழிவுதான் ஏற்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சாடியுள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நடத்திய இந்த செய்தியாளர்கள் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்பட்டது.
-
இனவாதத்தைப் பிரதிபலிக்கும் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை
– PMGG ஊடகப்பிரிவு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதனை ஆட்சேபித்தும் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் இணைந்து ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
-
இந்தியா: வட-கிழக்கு மாநிலங்களுக்கிடையில் இரு ‘டைம் ஸோன்’ அறிமுகம்
– SHM டெல்லி: அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் ‘மணி நேரம்’ நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும்.
-
தொழில் உத்தரவாதம்: பாதுகாப்பு தொடர்பில் இலங்கை – சவூதி ஒப்பந்தம்
கொழும்பு: வேலைவாய்ப்புகளுக்காக சவூதி அரேபியாவுக்குச் செல்லும் இலங்கையரின் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அரசு சவூதி அரசுடன் ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளவுள்ளது.
-
வங்கி ஊழியர் போல் நடித்து கிராம பெண்ணிடம் பண மோசடி
கலேவெல: தனியார் வங்கியின் வெளிக்கள உத்தியோகத்தர் எனத் தன்னை அறிமுகப் படுத்திய பெண்ணொருவர் கிராமப்புற பெண்ணொ ருவரிடம் வங்கிக் கடனாகப் 10 இலட்சம் ரூபாவை இலகுவாகப் பெறலாம் எனத் தெரிவித்து அப்பெண்ணின் கடனட்டையை மோசடி செய்து 50 ஆயிரம் ரூபாவை அபகரித்துச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கலேவெல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அண்டர்சனின் அதிவேக சாதனை-உலக சாதனையே- ஐ.சி.சி.
– MJ லண்டன்: கடந்த 1ம் திகதி, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் குயின்ஸ்டவுண் மைதானத்தில் இடம்பெற்ற 3வது ஒருநாள் போட்டி மழைகாரணமாக 21 ஓவர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அமைந்திருந்தது.
-
‘உலக இளைஞர் மாநாடு’ அடுத்த ஆண்டு கொழும்பில்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு : அடுத்த ஆண்டு மே மாதம் கொழும்பில் ‘உலக இளைஞர் மாநாடு’ நடைபெறவுள்ளதால் 2014ஆம் ஆண்டு இலங்கை இளைஞர்கள் அபிவிருத்தியில் முக்கியமானதாக இருக்குமென தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா தெரிவித்தார்.
-
ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகத்திருந்த ஹியுமன் கெப்பிட்டல் சொலூஷன்ஸ்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் குடும்ப ஒன்றிணைவு நிகழ்வொன்றை ஹியுமன் கெப்பிட்டல் சொலூஷன்ஸ் (HCS) நிறுவனத்தின் நலன்புரிச் சங்கம், ஜா-எல, குருகே நேச்சர் பார்க் பகுதியில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
-
காணி உரிமையும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் – அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி , மனித உரிமைகள் ஆணைக்குழு
பழுலுல்லாஹ் பர்ஹான் காணி உரிமை என்பது மனிதனின் இன்றியமையாத பொருளாதார உரிமையாகும். இவ்வுரிமை பிறருடைய சட்ட வழி உரிமையை பாதிப்பதாக இருத்தல் கூடாது என்பதுடன் அது சட்டரீதியான நிர்வாகி ஒருவரினால் வழங்கப்பட்டதாக இருத்தல் வேண்டும இவ் உரிமையை நிலைநாட்டுவதற்கு சட்ட ஆவணம் ஒன்று இருத்தல் வேண்டும் என்பதுவும் அவசியமாகியுள்ளது. இன்று எமது பிரதேசத்தில் காணியானது இனவிரிசல்களை ஏற்படுத்தி வருகிறது.
-
கிண்ணியா நகரசபை நகரபிதா ஹில்மி தலைமையில் நட்புறவு ஒன்றுகூடல்
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை தலைவராக பதவியேற்று தமது சேவைக்காலத்தில் சேவைகள் பலவற்றை வெற்றிகரமாக மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நகரசபை ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு ஒன்றுகூடல் நகரசபை மண்டபத்தில் வெகுவிமர்சியாக இடம்பெற்றது.
-
ஏறாவூர் பிரதேச செயலகத்தில் முன்மாதிரித் தோட்டம்!
– FM. பர்ஹான் ஏறாவூர்: உள்ளுர் கனிவர்க்கங்களையும் மூலிகைகளையும் ஊக்குவிக்கும் முகமாக ஏறாவூர் நகர பிரதேச செயலக வளாகத்தில் முன்மாதிரித் தோட்டமொன்று புத்தாண்டு தினமான நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
-
பிரச்சினைகள் ஏற்படாதவாறு மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்- ரவூப் ஹக்கீம்
– FM. பர்ஹான் நாவிதன்வெளி: நாட்டின் எதிர்காலம் என்பது இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தங்கியிருப்பதால். எங்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்,