Category: Your Kattankudy
-
மட்டு மாவட்டத்தில் நீதியமைச்சர் றஊப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் 7 புதிய தமிழ் முஸ்லிம் சமாதான நீதிவான்கள் நியமனம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 7 தமிழ் முஸ்லிம் சமாதான நீதிவான்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதியமைச்சர் றஊப் ஹக்கீம் சிபாரிசில் நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த தமிழ் முஸ்லிம் சமாதான நீதவான்களை நியமித்துத்தருமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் நியமித்துள்ளார்.
-
திருகோணமலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கக் கூட்டம்
பஹ்மி யூஸூப் திருகோணமலை: இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கக் கூட்டம் கடந்த 06.04.2014ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை திருகோணமலை பட்டினமும் சூழல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்தபுஞ்சி நிலமே தலைமையில் நடைபெற்றது.
-
‘நித்திலம்’ சஞ்சிகை வெளியீடு
பஹ்மி யூஸூப் திருகோணமலை: திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்ப படும் நித்திலம் சஞ்சிகையும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 07.04.2014ஆம் திகதி திங்கட்கிழமை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வலயக் கல்வி பணிப்பாளர் திரு.என்.விஜேந்திரன் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.
-
கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்த வேண்டாம் – மட்டக்களப்பில் வீதி விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பதாதைகள் மூலம் பொலிஸ் அறிவுரை
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினால் மட்டக்களப்பில் இடம்பெறும் வீதி விபத்துக்களை தடுக்க விஷேட செயற்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார். இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு நகரில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறும் பகுதிகளில் மக்கள் அவதானமாக செல்வதற்கும் போக்குவரத்து சட்டத்தை மதிக்கும் வாகன சாரதிகளுக்கு நன்றி செலுத்தியும் விழிப்புணர்வு பதாதைகள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பட்டுள்ளது.
-
ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவுதி அரசின் புதிய அறிவுரைகள்
SHM ரியாத்: ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் யாத்ரீகர்கள் நோய் வாய்ப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா செய்ய உலக நாடுகளில் இருந்து மக்காஇ மதீனாவுக்கு முஸ்லீம்கள் வருவார்கள். அதில் தொற்று நோய்கள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு புதிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சவுதி சுகாதாரத் துறை வெளியுறவு அமைச்சகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
-
யுவராஜ் சிங் வீட்டுக்கு கல் வீச்சு!
MR-40 சண்டிகர்: இலங்கைக்கு எதிரான டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியின்போது மகா மந்தமாக விளையாடியதால் யுவராஜ் சிங் மீது ரசிகர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். இந்தக் கோபத்தை அவரது வீட்டில் கல்வீசித் தாக்கி வெளிப்படுத்தியுள்ளனர்.
-
இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே சிறைக்கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் வியட்நாம் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் டிரான் டாய் குவாங்க நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கைச்சாத்து
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையே சிறைக்கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் வியட்நாம் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பேராசிரியர் கலாநிதி ஜெனரல் டிரான் டாய் குவாங்க், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் திங்கட்கிழமை (07) முற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கைச்சாத்திட்டனர்.
-
வெற்றி மகுடம் சூடிய நாயகர்களுக்கு உளமார வாழ்த்துகின்றேன்…!!
முஹம்மது காமில் கொழும்பு: நேற்று நடைபெற்று முடிந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் எமது இலங்கை அணி வெற்றி பெற்றது தொடர்பாக சமூக சேவகரும் நாபீர் சமூக சேவை அமையத்தின் தலைவருமான பொறியியலாளர் அல்ஹாஜ் யூ.கே.நாபீர் அவர்கள் தெரிவித்த வாழ்த்து செய்தி வருமாறு. இலங்கைத்தீவின் பெருமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு பறைசாற்றிய எமது வெற்றி நாயகர்களை வாழ்த்துவதில் இலங்கையன் எனும் வகையில் நான் பெருமிதம் அடைகின்றேன்.
-
மாதிரி பாலர் பாடசாலை திறப்பு விழா -ஏறாவூர், மீராகேர்னி , முஹாஜிரீன் கிராமத்தில்
ஏறாவூர் அபூ பாயாஸ் ஏறாவூர்: கிழக்குமாகாண உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சு இபாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் வேண்டுகோளின் பேரில் ‘பிளான் ஸ்ரீலங்கா” நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏறாவூர், முஹாஜிரீன் கிராமத்தில் முப்பத்தாறு லெட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மாதிரி பாலர் பாடசாலை கட்டிடம் நேற்று மாலை (01-04-2014) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-
கல்குடா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவித்து ICC T20 World Cup திரையரங்கு
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்குடா: 06.04.2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை நடை பெற்று முடிந்த ICC T20 World Cup இத்தியா மற்றும் இலங்கை அணிக்குமிடையிலான போட்டி நிகழ்வினை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வங்கதேசம் நோக்கி பயனித்திருத்தனர்.
-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் மேற்கொண்ட வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பு
PMGG ஊடகப்பிரிவு வவுனியா: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) வடமாகாண சபை பிரதிநிதி உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (03.04.2014) காலை 9.30 மணிக்கு வவுனியா வலயக் கல்விப் பணிமனைக் காரியாலயத்தில் வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.
-
உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி மூபீனின் வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் 7 பேர் சமாதான நீதவான்களாக நியமனம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என். மூபீனின் வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் 7 பேருக்கு வழங்கி வைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான் நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று 06-04-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு…