திருகோணமலை: திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்ப படும் நித்திலம் சஞ்சிகையும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று 07.04.2014ஆம் திகதி திங்கட்கிழமை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வலயக் கல்வி பணிப்பாளர் திரு.என்.விஜேந்திரன் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ அல்ஹாஜ் நஜீப் அப்துல் மஜீத், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.புஷ்பகுமார அவர்களும் கல்விமான்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்த தோடு மூவினத்தையும் பிரதி நிதித்துவம் படுத்தும் வகையில் மாணவாகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment