Category: Your Kattankudy
-
இந்திய கிரிக்கெட் வீரர்களை குறிவைக்கும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி!
லண்டன்: மகளிர் இங்கிலாந்து அணியின் டேனியல் யாட், கோஹ்லிக்கு விட்ட காதல் தூதை தொடர்ந்து சக வீராங்கனையான சாரா டெய்லர், ரவீந்திர ஜடேஜாக்கு ‘டுவிட்’ செய்துள்ளார். டி20 உலகக்கிண்ணம் தொடங்கியதில் இருந்தே ஆடவர் இந்திய அணியினருக்கும், மகளிர் இங்கிலாந்து அணிக்கும் ஏதோ இணைப்பிரியாத தொடர்பு நிலைவி வருகிறது.
-
றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலயத்தில் ‘சுகாதாரமான குழந்தை வளர்ப்பும் பெற்றோரும்’ எனும் தலைப்பில் பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கீழ் இயங்கும் புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலயத்தில் பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று 10.04.2014 வியாழக்கிழமை நடைபெற்றது.
-
மறிச்சிக்கட்டி முஸ்லிம்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கையொப்பமிட்டது
PMGG ஊடகப்பிரிவு மன்னர்: மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற முடியாத நிலையில் பல துன்பங்களை அனுபவித்துவரும் சூழ்நிலையில் இவ்விடயத்தில் தலையிட்டு நீதி வழங்குமாறு வலியுறுத்தும் அவசரக் கோரிக்கை ஒன்றினை 15 முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர். இவ்வசரக் கடிதத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சார்பாக பொறியியலாளர் ஆஆ.அப்துர் ரஹ்மான் கையெழுத்திட்டுள்ளார்.
-
விடுமுறை தினங்களில் இலங்கை முஸ்லிம்களை நாட்டின் அமைதிக்காகவும், சகவாழ்வுக்காகவும் பயன்படுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: எதிர்வரும் விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பிரயாணங்கள் செல்ல உத்தேசித்துள்ள முஸ்லிம்கள் முடியுமான வரை நாட்டின் தற்போதைய நிலைமையைக் கவனத்தில் கொண்டு அவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறும், அவ்வாறு செல்பவர்கள் இஸ்லாத்தின் வரையறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழமை போன்றே இம்முறையும் அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது.
-
அதிகரித்து வரும் கடும்போக்கு சிங்கள தீவிர வாதம்!
இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையில் இனப் பிரச்சினையினை தீர்த்து சகல இன மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்பதில் அரசாங்கமும், சர்வதேச சமூகமும் எடுத்துவரும் முயற்சிகளுக்கு தற்போது இலங்கையில் உருவாகியுள்ள கடும்போக்கு சிங்கள தீவிர வாத அமைப்பான பொதுபலசேனவின் முனைப்புக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
-
புறநெகும மீளாய்வு சம்பந்தமாக உலக வங்கி பிரதிநிதிகள் கிண்ணியா நகரசபைக்கு வருகை
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் செயற்படுத்தப்பட்டுவரும் புறநெகும திட்டத்தின் கிண்ணியா நகரசபைக்குட்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வுகள் சம்பந்தமாக பார்வையிடவென உலக வங்கி பிரதிநிதிகள் கிண்ணியா நகரசபைக்கு இன்று (10) வருகை தந்து புறநெகும அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வு நடைமுறைகளை பார்வையிட்டனர்.
-
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் தமிழ் -சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நெஸ்டமோல்ட் கம்பனியின் அனுசரனையுடன் தமிழ் -சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா 01-04-2014 இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
சிறுவர்களை துஸ்பிரயோகப்படுத்தினால் தண்டனை அதிகம் : அப்துல் அஸீஸ் JP, புலனாய்வு அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
Azeez Careem மட்டக்களப்பு: இன்று பண்டிகை காலம் என்பதால் மட்டக்களப்பில் வியாபார நடவடிக்கைகள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதேநேரம் மாணவர்களுக்கு பரீட்சை முடிவடைந்து வீடுகளிலும், விளையாட்டுக்களிலும் காலத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் அதிகமான வியாரிகள் தங்களது வியாபார நிலையங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று வேலைக்கமர்த்தியுள்ளனர். சிறுவர்களுக்கான ஓய்வினை அனுபவிக்கும் உரிமை மறுக்கப்பட்டு கூடுதலான நேரம் வேலைத்தளங்களில் எடுபிடி வேலை செய்வதற்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
-
‘ஐ.பி.எல். போட்டிகளின் அனுபவமே உலகக் கிண்ண வெற்றி’ – லசித் மலிங்க
– S -90 கொழும்பு: ஐ.பி.எல் போட்டிகள்தான் எங்களுக்கு நல்ல பயிற்சிக்களமாக அமைந்தது. அந்த அனுபவம்தான் எங்களுக்கு டுவென்டி 20 உலகக் கோப்பையை வெல்ல உதவியாக இருந்தது என்று இலங்கை அணித் தலைவர் லசித் மலிங்க கூறியுள்ளார்.
-
மதியிழந்த மந்திகள்
பிரகாசக்கவி கூர்ப்படைந்த குரங்குகள் கூட்டமொன்றில் மதியிழந்த மந்திகளை போல… யுத்தம் கருக்கலைந்த தேசமொன்றில் இன்று !
-
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்க்குச் சொல்ல வேண்டும் – கிழக்கு மாகாண சபையின் மாதர்ந்த அமர்வில் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உரை
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: விடுதலைப் போர் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளையும் உயிர் காவுகளையும் முன் கொண்டு வருவதன் மூலமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்க்குச் சொல்ல வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் மாதர்ந்த அமர்வு கடந்த மாதம் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார்.
-
பத்து வருடங்களுக்கு மேல் மத்தியஸ்த சபையில் பணியாற்றியதை கௌரவிக்கும் முகமாக கா-குடி மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு அகில் இலங்கை சமாதான நீதவான் பதவி நீதி அமைச்சினால் வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மத்தியஸ்தர்கள் சபை உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேல் மத்தியஸ்த சபையில் பணியாற்றியதை கௌரவிக்கும் முகமாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பரிந்துரைக்கமைய அகில் இலங்கை சமாதான நீதவான் பதவி நீதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.