மதியிழந்த மந்திகள்

poem 000பிரகாசக்கவி

கூர்ப்படைந்த
குரங்குகள் கூட்டமொன்றில்
மதியிழந்த
மந்திகளை போல…

யுத்தம் கருக்கலைந்த
தேசமொன்றில்
இன்று !

பேரினவாதத்தின் ருசிதட்டிய
சில தெருநாய்கள்

தன் மதவாதமென்னும்
குறி நீட்டி அலைகின்றன
அங்கும் இங்கும்

சிறுபான்மையெனும்
சிசுக்கள் தேடி …

 

Published by

Leave a comment