Category: Your Kattankudy
-
இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான்- கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரமவை சந்தித்தார்
பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணாமலை: சாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், இளைஞர் சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸானுக்கும், கிழக்குமாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று 28.04.2014 இன்று திங்கட்கிழமை காலை திருகோணாமலையிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
எனது பார்வையில்…. இடம்பெறவிருக்கும் பிரித்தானியவாழ் முஸ்லிம்களின் ‘லண்டன் ஆர்ப்பாட்டம்’
– ராஜரட்ணம் லண்டன்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் பொதுபலசேனா எனும் சிங்கள அமைப்புக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பிரித்தானியவாழ் முஸ்லிம்களுக்கிடையில்
-
மன்னார், மறிச்சுக்கட்டி மக்களுக்கு இதுவரை எதுவித தீர்வும்கிடைக்கவில்லை! வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின்
– PMGG ஊடகப் பிரிவு மன்னார்: மன்னார், மறிச்சுக்கட்டி மக்களுக்கு இதுவரை எதுவித தீர்வும்கிடைக்கவில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மின் தெரிவிகின்றார்.
-
நடுவானில் இரு விமானங்கள் மோதல்
– SHM நியுயோர்க்: அமெரிக்காவைச் சேர்ந்த செஸ்னா ரக விமானம் ஒன்று இன்னொரு விமானத்துடன் நடு வானில் மோதி கலிபோர்னியா வளைகுடா கடலில் விழுந்தது. சான்பாப்லோ பகுதிக்கு அருகே இந்த விபத்து நடந்தது. செஸ்னா விமானம், ஹக்கர் சீ பரி டிஎம்கே 20 ரக விமானத்துடன் மோதியது. அதேசமயம், ஹக்கர் சீ விமானம் பத்திரமாக தரையிறங்கி விட்டது.
-
உலகில் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம்
– S-90 டுபாய்: பெண்களுக்கு மரியாதை அளிப்பதில் உலக நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை பிடித்துள்ளது. பெண்களுக்கு மரியாதை அளிப்பது குறித்து முக்கிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 132 நாடுகளில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் நலன்கள் பற்றி ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
-
சவூதியில் மீண்டும் பரவும் ‘மெர்ஸ்’ வைரஸ்: இதுவரையில் 102 பேர் உயிரிழப்பு!
றியாத்: பல ஆண்களுக்கு முன்னர் ஆசியாவை அச்சுறுத்திய வைரஸ் கிருமிக்கு இணையாக புதிய ‘மெர்ஸ்’ கிருமியின் தாக்குதலால் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. ‘மெர்ஸ்’ கிருமியின் தாக்குதலால் பரவி வரும் மர்ம நோயானது, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
-
காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் ஜவ்பர்முஹம்மட் இஸ்மாயில் என்பவரின் ஜனாஸா கத்தார் முஸைமீர் மையவாடியில் நல்லடக்கம்
– கத்தாரிலிருந்து பழுளுல்லாஹ் பஹ்ஜான் டோஹா: காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் ஜவ்பர்முஹம்மட் இஸ்மாயில் (வயது46) என்பவரின் ஜனாஸா நேற்று ஞாயிற்றுக்கிழமை கத்தார் முஸைமீர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
விஷேட பொலிஸ் குழு இன்று முதல் இயங்கும்
கொழும்பு: இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு இன்று முதல் செயற்படவுள்ளது.
-
புகைப்பிடித்தல்: மதுப்பாவனை: வருடாந்தம் 2,80,000 பேர் உயிரிழப்பு
கொழும்பு: புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பாவனை காரணமாக இலங்கையில் வருடமொன்றுக்கு 02 இலட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதேநேரம், புகைப்பிடித்தலால் மாத்திரம் நாளொன்றுக்கு 65 பேர் உயிரிழப்பதாகவும், அது வருடமொன்றுக்கு 21 ஆயிரம் ஆக விளங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
-
யூதப் படுகொலை உலகின் மிகக் கொடூரமானது’ – அப்பாஸ்
காஸா: நவீன வரலாற்றில் மனிதகுலத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட மிகக் கொடூரமான குற்றமாக ”கோலோகோஸ்ட்” யூத இனப்படுகொலையை பாலத்தீன அதிபர் மஃமுட் அப்பாஸ் வர்ணித்துள்ளார்.
-
‘உலகிலேயே வயதான ஆண்’ என்ற கிண்ணஸ் சாதனைக்குரியவர் மரணம்
– SHM ரோம்: இத்தாலி நாட்டை சேர்ந்த மிகவும் வயதான மனிதர் என்ற பெருமை பெற்ற அர்த்ரோ லிட்டிகோ இன்று மரணமடைந்தார். உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அவருக்கு வயது 111. 1902ம் ஆண்டு மே 2ம் தேதி இத்தாலியில் பிறந்தார் அர்த்ரோ லிட்டிகோ. 19 வயதில் ராணுவத்தில் சேர்ந்தார்.
-
எங்கள் தேசம் செய்தி இணையத்தளம் அங்குரார்ப்பணம்
– எங்கள் தேசம் மாதம்பை: எங்கள் தேசம் பத்திரிகையின் செய்தி இணையத்தளம் நேற்று (சனிக்கிழமை) இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஷ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.