காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் ஜவ்பர்முஹம்மட் இஸ்மாயில் என்பவரின் ஜனாஸா கத்தார் முஸைமீர் மையவாடியில் நல்லடக்கம்

photo– கத்தாரிலிருந்து பழுளுல்லாஹ் பஹ்ஜான் 

டோஹா: காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் ஜவ்பர்முஹம்மட் இஸ்மாயில் (வயது46) என்பவரின் ஜனாஸா நேற்று ஞாயிற்றுக்கிழமை கத்தார் முஸைமீர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்று இஷாத் தொழுகையின் பின் அபூ ஹாமூர் முஸைமீர் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த ஜனாஸாவில் இலங்கை வாழ் சகோதரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அன்னாரது கப்று வாழ்க்கை வெளிச்சத்திற்காகவும் மறுமை வாழ்வுக்காகவும் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக! ஆமீன்

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த இரு நாட்களுக்கு முன் கத்தாரில் வபாத்தானமை குறிப்பிடத்தக்கது.

{ஒரு ஆத்மா எங்கு மரணிக்கும் என்பது யாரினாலும் அறிய முடியாத} அல்குர்ஆன் 31:34

‘ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ’

photojafeer

Published by

Leave a comment