Category: Your Kattankudy
-
மௌலவி பாஹிர் அகில இலங்கை சமாதான நீதவனாக நியமனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: குருநாகல் மாவட்டத்தின் தல்கஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி எம். எப். எம் பாஹிர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சிபாரிசில் நீதி அமைச்சினால் அகில இலங்கை சமாதான நீதவனாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
காத்தான்குடி-பிரதேச கலை இலக்கிய விழாவும்,ஸம்ஸம் சிறப்பு மலர் மற்றும் கலாசார கண்காட்சி இறுவட்டு வெளியீடும்
பழுலுல்லாஹ் பர்ஹான் / எம். எச். எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து வருடா வடுடம் நடாத்திவரும் 2014 பிரதேச கலை இலக்கிய விழாவும்,ஸம்ஸம் சிறப்பு மலர் மற்றும் கலாசார கண்காட்சி இறுவட்டு வெளியீடும் 09-12-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
“மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது”: மைத்திரி
கொழும்பு: தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு கைலாகு கொடுக்கவில்லை என்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு கைலாகு கொடுப்பதற்காக கையை நீட்டினார். எனினும் அதனை மறுத்த மைத்திரிபால கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NFGG, பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அவர்களுடன் விஷேட சந்திப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், தேர்தல் செயற்பாடுள் மற்றும் பிரச்சார நடவடிக்கைக்களை வடக்கு மாகாண முஸ்லிம் மக்களிடத்தில் முன்னெடுத்துச் செல்வது குறித்தும் ஆராய்ந்து வருகின்றது.
-
மைத்திரியை ஆதரித்து கிழக்கில் தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு NFGG தயார்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: கடந்த இரண்டு தினங்களாக (6, 7 டிசம்பர் 2014) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு NFGG இன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் NFGG, பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததன் காரணங்களையும் அத்தீர்மானத்தை எட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசியல் செயற்பாடுகள் முன்னெடுப்புகள் குறித்து தமது அங்கத்தவர்களுக்கும்
-
தீவிரவாத குற்றச்சாட்டில் சவூதி அரேபியாவில் 135 பேர் கைது
றியாத்: நாட்டுக்கு எதிராக தீவிரவாத மற்றும் சதிச் செயலில் ஈடுபட்ட 26 வெளிநாட்டினர் உட்பட 135 பேரை கைது செய்ததாக சவூதி அரேபிய நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 40 பேர் சிரியா – ஈராக் பகுதிகளுக்கு சென்று ஆயுத பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். இவர்கள் நாடு திரும்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
-
உலககிண்ணம் 2015: இலங்கை அணியின் வீரர்கள் விபரம்
கொழும்பு: எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான உத்தேச இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ள சச்சித்ர சேனாநாயக்கவும் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளார். இறுதியாக 2012 ஆம் ஆண்டில் அணியில் அங்கம்வகித்த நுவன் பிரதீப் மற்றும் பர்விஸ் மஹரூப் ஆகியோரும் 30 பேரடங்கிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
-
க.பொ.த. (சா/த) பரீட்சை இன்று ஆரம்பம்: 5 இலட்சத்து 77 ஆயிரத்து 220 பேர் தோற்றுவர்
கொழும்பு: க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று (09) ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 4 ஆயிரத்து 279 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சைக்காக இம்முறை 5 இலட்சத்து 77 ஆயிரத்து 220 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களுள் 2 இலட்சத்து 6 ஆயிரம் 841 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர்.
-
மஹிந்தவுக்கு ஆதரவு குறித்து முடிவேதும் எடுக்கப்படவில்லை:அ.இ. மக்கள் காங்கிரஸ்
கொழும்பு: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சில கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றாலும், ஆதரவு எனும் முடிவு எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலர் ஒய் எல் எஸ் ஹமீத் தெரிவித்தார்.
-
பாதுகாப்பு அமைச்சில் முஸ்லிம் காங்கிரஸ் குழு சந்திப்பு -நீண்டகால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி, மீன்பிடி மற்றும் வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் குழுவினருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய அரசாங்க குழுவினருக்கும் இடையில் திங்கட்கிழமை (8) பிற்பகல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
-
மஞ்சந்தொடுவாய் ஹிக்மா அகடமியின் கலை நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்
PMGG ஊடகப்பிரிவு மஞ்சந்தொடுவாய்: மஞ்சந்தொடுவாய் ஹிக்மா அகடமியின் கலை நிகழ்வு நேற்று மாலை 4 மணிக்கு மஞ்சந்தொடுவாய் ஹிழுரியா மதரஸா கட்டடத்தில் அதன் தலைவர் MIM. ஹக்கீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.