கொழும்பு: எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான உத்தேச இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது.சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ள சச்சித்ர சேனாநாயக்கவும் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளார். இறுதியாக 2012 ஆம் ஆண்டில் அணியில் அங்கம்வகித்த நுவன் பிரதீப் மற்றும் பர்விஸ் மஹரூப் ஆகியோரும் 30 பேரடங்கிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அத்துடன் புதுமுக வீரர்களான லக்சன் சந்தஹன் மற்றும் தரிந்து கௌசல் ஆகியோரும் உலகக் கிண்ண போட்டிகளுக்காக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். எனினும் திலின கண்டம்பி மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்டுள்ள 30 பேர் கொண்ட உத்தேச அணி விபரம் வருமாறு :
1). அஞ்சலோ மெத்யுஸ் (தலைவர்) 2). டி.எம்.டில்சான்,
3). லகிரு திரிமன்ன 4). குமார் சங்கக்கார
5). மஹேல ஜயவர்தன 6). குசல் பெரேரா
7). உபுல் தரங்க 8). திமுத் கருணாரத்ன
9). டினேஷ் சந்திமால் 10). அசின் பிரியஞ்சன்
11). கித்ருவன் விதானகே 12). நிரோசன் திக்வெல்ல
13). ரங்கன ஹேரத் 14). டில்ருவன் பெரேரா
15). சீக்குகே பிரசன்ன 16). அஜந்த மென்டிஸ்
17). சச்சித்ர சேனநாயக்க 18). பி.எச்.டி குசல்
19). ஜPவன் மென்டிஸ் 20). ரமித் ரம்புக்வெல்ல
21). சுரங்க லக்மால் 22). நுவன் குலசேகர
23). லசித் மாலிங்க 24). தம்மிக்க பிரசாத்
25). சமிந்த ஏரங்க 26). திஸர பெரேரா
27). பர்வீஸ் மஹரூப் 28). நுவன் பிரதீப்
29). லகிரு கமகே 30). லக்சன் சந்தகன்
Published by



Leave a comment