Category: Your Kattankudy
-
மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனுக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு
ஏ.எல்.எம்.தாஹிர் கொழும்பு: மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோனுக்கும் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவினருக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன் போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக
-
வத்திகான் தூதரை வெளியேற்ற மலேசியாவில் ஆர்ப்பாட்டம்
கோலாலம்பூர்: மலேசியாவிற்கான வத்திக்கானின் முதல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவரை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பல முஸ்லீம் ஆர்வலர்கள் மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.
-
மஹியங்கனை உள்ளிட்ட பள்ளிவாசல்கள் புனித ரமளான் என்றும் பாராது இவ்வாறு தாக்கப்படுவதையும் அவற்றில் தொழவிடாமல் தடுப்பதையும் நேர்மையாகச் சிந்திக்கும் பௌத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் – அமைச்சர் ஹக்கீம்
பழுளுல்லாஹ் பர்ஹான் மஹியங்கனை: மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசலில் வழமையாக நடந்து வரும் ஜூம்ஆ தொழுகையை புனித ரமழான் மாதத்தில், இந்த வெள்ளிக்கிழமை அங்கு நடாத்தக் கூடாதென்று ஊவா மாகாண
-
மஹியங்கனை மஸ்ஜிதுல் அறபா ஜூம்ஆப் பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது இலங்கையின் இன நல்லுறவிற்கு பாரிய சவாலாக அமையும்- பூகம்பமாய் வெடிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தலையிட்டு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்-கல்முனை முதல்வர் சிராஸ்.
பழுளுல்லாஹ் பர்ஹான் மஹியங்கனை மஸ்ஜிதுல் அறபா ஜூம்ஆப் பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது இலங்கையின் இன நல்லுறவிற்கு பாரிய சவாலாக அமைவதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
‘மஹியங்கனை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையையோ அல்லது ஐந்து வேளை தொழுகைகளோ நடைபெறக்கூடாது’
மஹியங்கனை: ஊவா மாகாண அமைச்சர் ஒருவரின் அச்சுறுத்தலால் பதுளை மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் இன்று மூடப்பட்டுள்ளது. இதனால் இன்று இடம்பெறவிருந்த ஜும்ஆ தொழுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
-
இங்கிலாந்தில் ‘கொக்ககோலா’ விளம்பரத்திற்கு தடை!
– OIT லண்டன்: கொக்ககோலா விளம்பரம் மக்களிடையே தவறான தகவல்களை பரப்புகிறது என்று கூறி அதை ஒளிபரப்ப தடை இங்கிலாந்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கொக்ககோலா விளம்பரத்தில் 75 விநாடிகள் வாய்விட்டு சிரித்தால் 139 கலோரிகள் எரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டுபாயில் இந்திய ஓட்டுனரைத் தாக்கும் டுபாய் நாட்டவரின் வீடியோ காட்சியை படம்பிடித்து இணையத்தில் உலாவிட்டவர் கைது!
டுபாய்: டுபாயில் வீதிச் சண்டை ஒன்றை வீடியோ படம் பிடித்து இணையத்தில் வெளியிட்ட ஆசிய நாட்டவர் ஒருவரை ஐக்கிய அரபு இராச்சிய (UAE) காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சிய பிரஜை ஒருவர் இந்திய ஓட்டுநர் ஒருவரைத் தாக்குகின்ற காட்சியையே அவர் வெளியிட்டுள்ளார்.
-
தொடங்கிய 2வது ஆண்டிலேயே கைவிடப்பட்டஇலங்கை பிறீமியர் லீக்!
கொழும்பு: இலங்கையில் நடைபெறவிருந்த, இரண்டாவது பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் நடக்கும் பிறீமியர் தொடர் (ஐ.பி.எல்) போல இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்.எல்.சி), கடந்த ஆண்டு பிறீமியர் T20 தொடர் நடைபெற்றது. இரண்டாவது தொடர், வரும் ஆகஸ்ட் 10ம் திகதி- செப்டம்பர் 7ம் திகதி வரை நடக்க இருந்தது.
-
சவூதி பொதுமன்னிப்பு: முதற்கட்டமாக 3000 பேர் இலங்கை வருகை
கொழும்பு: சவுதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில், விசா காலாவதியாகியும் அந்நாட்டில் தங்கியிருந்த சுமார் 3000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட குழுவாகவே இவர்கள் வந்துள்ளதாகவும் இன்னும் பலர் வரக்கூடும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
-
‘கல்வியூட்டல் மூலம் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புதல்’
– M. ரிஸ்கான் ஒலிவ்ஸ் பவுன்டேஷனினால் ‘கல்வியூட்டல் மூலம் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த.உ/த மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை – 2013 மற்றும் அதனுடன் இணைந்த உயர்கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஆகியன மிக வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
-
‘நீதிமன்றங்களுக்குச் சென்றால் மக்கள் நடுநடுங்குகின்றனர்’ – நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நீதிமன்ற கட்டமைப்புக்கு வெளியே தற்பொழுதுள்ள இணக்க சபைகளுடன், வேறொரு விதமான விஷேட இணக்க சபைகளையும்; ஏற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் முன்னர் இடம்பெயர்ந்த மக்களை
-
மட்டக்களப்பிலுள்ள வீடொன்றில் அருகிவரும் சட்டவிரோத ஆமைகள், மலைப்பாம்புகள் கைப்பற்றப்பட்டது
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் காத்தான்குடிப் பொலிஸாரும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நொச்சிமுனை கலைமகள் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட ஐந்து ஆமைகள் மற்றும சுமார் 9அடி நீளமுள்ள மலைப்பாம்பொன்றும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.