ஒலிவ்ஸ் பவுன்டேஷனினால் ‘கல்வியூட்டல் மூலம் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளுடன் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த.உ/த மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை – 2013 மற்றும் அதனுடன் இணைந்த உயர்கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஆகியன மிக வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் கிழக்கு மாகாண ரீதியாக முன்னெடுக்கப்பட்டு, அண்மையில் அமைப்பின் தவிசாளர் S.A. சதாம் தலைமையில் அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஒலிவ்ஸ் அமைப்பின் தலைவர்உரையாற்றுவதையும், கலந்துகொன்ட மாணவர்களில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.



Leave a comment