Author: yourkattankudy.com
-
மின் சூரியனால் சுட்டுப் பொசுக்கும் லண்டனின் 37 மாடி கட்டிடம்!
– OiT லண்டன்: லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று மக்களின் பெரும் துயரமாக மாறியுள்ளது. காரணம், இந்தக் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜன்னல் கண்ணாடிகள் சூரிய வெளிச்சத்தை படு பிரகாசமாக பிரதிபலித்து மக்களுக்கு பெரும் இடையூறு செய்வதால் என்று கூறுகிறார்கள். குறித்த கட்டிடத்தால் அதிக சூரிய ஒளி தாக்குகிறது என மக்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.
-
“புலிகளுக்கு அஞ்சலி செலுத்த திட்டமில்லை”
லண்டன்: ஐநா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, சமீபத்தில் மேற்கொண்ட இலங்கை விஜயத்தின் போது, விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தார் என்ற செய்திகள் “ திரிபுபடுத்தப்பட்டவை” என்று அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட தீடீர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…..
விசேட நிருபர்- இன்று பிற்பகல் பெய்த திடீர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் குறிப்பாக காத்தான்குடி, ஏறாவுர்,கிரான்,படுவாங்கரை போன்ற பல பகுதிகளின் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
-
PPL 2013: இரண்டாவது லீக் சுற்றின் இறுதி போட்டி வெள்ளிக்கிழமை
– றிபாத். எல்.எம். காத்தான்குடி: பூநொச்சிமுனை விளையாட்டு கழகம், சியாத் பவுண்டேஷன் அனுசரணையுடன் நடாத்தும் ‘PPL 2013 Champions Cup T20′ 12வது லீக் சுற்றின் இறுதி போட்டி 2013.09.06 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு காத்தான்குடி அணிக்கும், கல்முனை ஏஜ்ஸ்டீல் அணிக்கும் பூநொச்சிமுனை அல்இக்ரா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
-
வாராந்த மார்க்க விளக்க வகுப்பு
காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் பிரதி வியாழக்கிழமை தோறும் இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டாம் வாரமாக இன்று 05.09.2013இல் நடைபெறவுள்ள தொடரில் ‘இஸ்லாமிய அகீதாவும் அதன் வரையறைகளும்’ எனும் தலைப்பில் அஸ்செய்க் ஏ.ஜீ.எம். ஜலீல் (மதனி) அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்.
-
அந்தக் காமுகர்கள் இவர்களே…
– OiT மும்பை: மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். மும்பை மலாத் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் (ஃபஷன் ஸ்டைலிஸ்ட்) ஓஷிவாராவில் உள்ள கடைத் தொகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 5.30 ஆட்டோவில் தனியாக சென்றுள்ளார்.
-
சிரியாவுக்காக பிரார்த்தனை: போப் அழைப்பு
ரோம்: சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்று கோரும் ஒரு கவன்யீர்ப்பு நிகழ்ச்சிக்கு போப் பிரான்ஸிஸ் அழைப்பு விடுத்துள்ளார். ரோமில் தனது வாராந்திர உரையினை நிகழ்த்திய அவர், எதிர்வரும் சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ள ஒரு கவனயீர்ப்பு நிகழ்வில் கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கர் அல்லாதோர் பெருமளவில் திரள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் சதி!
எஸ்.றொசேரியன்லெம்பேட் கொழும்பு: தமிழத் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெட்கத்திற்குரியதும், கண்டனத்திற்குரியதுமாகும். பொறுப்பற்ற விதத்தில் மக்களிடம் அதிகாரத்தை மட்டும் கோருகிற உப்புச்சப்பற்ற தேர்தல் விஞ்ஞாபன
-
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது காத்தான்குடி செய்ன் மௌலானா பள்ளிவாயல்
-டீன் பைரூஸ்- காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதி (பஸ் தரிப்படத்திற்கு முன்பாக) உள்ள அஷ் செய்யிது ஸெய்ன் மௌலானா பள்ளிவாயல் புதிய கட்டுமாணப் பணிக்காக வேண்டி உடைப்பதற்கான பணிகள் சென்ற வாரதிதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
அமெரிக்காவுக்கு எதிரான தலைவர்களை கொலை செய்ய நூதனத் திட்டம்
கொழும்பு: அமெரிக்காவிற்கு எதிரான தலைவர்களை கொலை செய்வதற்கு நூதனத் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரச தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அமெரிக்கா அல்லது வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும் போது அவர்களது உடலுக்குள் புற்று நோய் கிருமிகளை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் ஏற்படக் கூடிய அபாயம்: கோத்தபாய எச்சரிக்கை !
கொழும்பு: நாட்டில் முஸ்லிம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கொழும்பில் பாதுகாப்பு தொடர்பாக இடம்பெற்ற கருத்தரங்கில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
-
சிரியாவினால் முடக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் இணையத்தளம்
டமஸ்கஸ்: சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கியுள்ள இந்த சண்டையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியன்று அரசு துருப்பு ரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதில் 426 குழந்தைகள் உட்பட 1429 பேர் பலியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.